23.10.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஐப்பசி மாதம் 06 ஆம் நாள் புதன்கிழமை.
கிருஷ்ணபட்ச தசமி திதி முன்னிரவு 9.25 வரை. அதன் மேல் ஏகாதசி திதி. ஆயில்யம் நட்சத்திரம் பகல் 12.18 வரை. பின்னர் மகம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை தசமி. சித்தயோகம். கரிநாள். சுபம் விலக்குக. கீழ்நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: திருவோணம், அவிட்டம். சுபநேரங்கள்: பகல் 10.45 – 11.45 மாலை 4.45 – 5.45 ராகுகாலம் 12.00 – 1.30 எமகண்டம் 7.30 – 9.00 குளிகைகாலம் 10.30 – 12.00 வாரசூலம் – வடக்கு (பரிகாரம் – பால்)
மேடம் :பிரயாணம், அலைச்சல்
இடபம் : அசதி, வருத்தம்
மிதுனம் : திறமை, முன்னேற்றம்
கடகம் : கோபம், சினம்
சிம்மம் : பரிவு, பாசம்
கன்னி : பக்தி, ஆசி
துலாம் : அதிர்ஷ்டம், நன்மை
விருச்சிகம் : வெற்றி, யோகம்
தனுசு : விரயம், செலவு
மகரம் : பகை, விரோதம்
கும்பம் : பணம், பரிசு
மீனம் : மகிழ்ச்சி, சந்தோஷம்
குருப் பெயர்ச்சி (28.10.2019 பின்னிரவு) தனுசு ராசி (மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம்) பலன்கள்: வைராக்கியம், திடசிந்தனை, நேர்மை, நீதி, தியாகம், தர்மகுணம், மற்றவர்களின் குற்றம் குறைகளை துருவி ஆராயும், பொன்மனச் செம்மல்களே! குருபகவான் உங்கள் ராசிநாதன் ராசிக்கு வருகின்றார். ஆட்சியுடன் இருப்பதால் இதுவரை காலமும் சனி, கேதுவினால் பாதிப்படைந்த உடல்நிலை சீராகும். குடும்பத்தில் மகிழ்ச்சி, புத்திர வகையில் மகிழ்ச்சி, மனைவியின் உடல் நலம் குணமடைதல், தொழிலாளர்களுக்கு செய்தொழில் விருத்தி, 9 ஆவது பார்வை பிதுர் பாக்கிய தர்மஸ்தானத்தை பார்ப்பதால் வெளிநாட்டு பிரயாணம், சுபச் செலவுகள் ஏற்பட பலன் உண்டு. குருபகவானின் உதயம், சஞ்சாரம், வக்ரகதி, அதிசாரம் அஸ்மனம், தசாபுத்தி பலன் சிறிய மாற்றங்களை உண்டு பண்ணினாலும் பாதகமான பலன்கள் ஏதுமில்லை. சனிபகவானை வழிபட சகலதும் நன்மையே. 85 வீதம் நற்பலன்கள் உண்டு.
புதன், செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 5 – 9
பொருந்தா எண்கள்: 2 – 8 – 1
அதிர்ஷ்ட வர்ணங்கள்: சிவப்பு, நீலம்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)