22.10.2019 ஸ்ரீவிகாரி வருடம் ஐப்பசி மாதம் 05 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.
கிருஷ்ணபட்ச நவமி திதி முன்னிரவு 11.38 வரை. பின்னர் தசமி திதி. பூசம் நட்சத்திரம் பிற்பகல் 1.41 வரை. பின்னர் ஆயில்யம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை நவமி .சித்தயோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்; உத்தராடம், திருவோணம். சுபநேரங்கள்; பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகுகாலம் 3.00 – 4.30, எமகண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00 – 1.30, வாரசூலம் –வடக்கு பரிகாரம் – பால். சந்தியார் நாயனார் குருபூஜை.
மேடம் : மறதி, விரயம்
இடபம் : உதவி, நட்பு
மிதுனம் : நிறைவு, பூர்த்தி
கடகம் : தடங்கல், இடையூறு
சிம்மம் : தடை, தாமதம்
கன்னி : அதிர்ச்சி, பிரமை
துலாம் : தனம், சம்பத்து
விருச்சிகம் : நன்மை, அதிர்ஷ்டம்
தனுசு : புகழ், தேர்ச்சி
மகரம் : யோகம், அதிர்ஷ்டம்
கும்பம் : ஓய்வு, அசதி
மீனம் : காரியசித்தி, அனுகூலம்
“குருப்பெயர்ச்சி” விருச்சிக ராசி விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை நட்சத்திர பலன்கள். பஞ்சபூத தத்துவத்தில் உங்கள் ராசியை நீராகவும் மேஷத்தை நெருப்பாகவும் கொண்டவன் உங்கள் ராசிநாதன் செவ்வாய். நாளைய வாழ்க்கையை இன்றே சீரமைத்துக்கொள்ளும் சக்தி கொண்டவர்கள் நீங்கள். குடும்பம், தனம், வாக்கு ஸ்தானம் குரு இருப்பதால் வாக்குபலம், தனம், குடும்ப விருத்தி முதலியன ஏற்படும் பலன் உண்டு. கடந்த கால சோதனைகளும், வேதனைகளும் விட்டு விலகும். வரும் காலம் வசந்த காலமாக விளங்கும். தசாபுத்தி சிறப்பாக அமைந்தால் மேலும் சிறப்படைவீர்கள். உடல் நிலையில் விருத்தி, மனக்குழப்பம் விட்டு விலகும். விரோதிகள் தொல்லை விலகும். வளமான வாழ்க்கை உண்டாகும். தொட்டதெல்லாம் சிறக்கும். குருவின் 7–ஆம் பார்வையால் ஆயுள் விருத்தி, செய்தொழில் மேன்மை–யுண்டாகும். சனி பகவான் வழிபாடு, நவக் கிரகங்களுக்கு தீபம் ஏற்றி வர நன்மையுண்டாகும்.
ராகு, சனி கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5
பொருந்தா எண்கள்: 4, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர்நீலம்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)