21.10.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஐப்பசி மாதம் 4 ஆம் நாள் திங்கட்கிழமை.
கிருஷ்ணபட்ச அஷ்டமி திதி பின்னிரவு 1.37 வரை. அதன் மேல் நவமி திதி. புனர்பூசம் நட்சத்திரம் பிற்பகல் 2.50 வரை. பின்னர் பூசம் நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை அஸ்டமி. அமிர்தசித்தயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: பூராடம், உத்திராடம். சுபநேரங்கள்: காலை 9.15– 10.15, மாலை 4.45– 5.45, ராகு காலம் 7.30– 9.00 குளிகைகாலம் 1.30– 3.00, எமகண்டம் 10.30– 12.00, வாரசூலம் –கிழக்கு (பரிகாரம்– தயிர்) அவமாகம். காலாஷ்டமி ராதா ஜெயந்தி, ஈசுவா ராஷ்டமி.
மேடம் : நலம், ஆரோக்கியம்
இடபம் : நட்பு, உதவி
மிதுனம் : திறமை, ஆர்வம்
கடகம் : பகை, பயம்
சிம்மம் : விருத்தி, மேன்மை
கன்னி : செலவு பற்றாக்குறை
துலாம் : பாராட்டு, செல்வாக்கு
விருச்சிகம் : வெற்றி, அதிர்ஷ்டம்
தனுசு : சலனம், சஞ்சலம்
மகரம் : புகழ், சாதனை
கும்பம் : அமைதி, தெளிவு
மீனம் :பிரயாணம், அலைச்சல்
குருப்பெயர்ச்சி (28.10.2019) தனுராசி பிரவேசம். துலா ராசிக்குரிய பலன்கள். சித்திரை 3, 4 பாதங்கள். சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் ராசியாதிபதி சுக்கிரன், நட்சத்திர அதிபதிகள் செவ்வாய், ராகு, குரு. யோகாதிபதிகள் சனி, புதன், சுக்கிரன். பாதகாதிபதி சூரியன். 5 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 7 மிடம் களத்திர ஸ்தானம், 7 ஆம் பார்வையாக 9 மிடம் லாபஸ்தானத்தையும் செழிப்படைய வைப்பார். இதனால் கணவன் –மனைவியிடையே அன்யோன்யம் ஏற்படும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். ரோகங்கள் அகலும். சுகம் விருத்தியாகும். பிதிர் ஸ்தானம், தர்மஸ்தானம் பாக்கியஸ்தானம் சிறப்படைவதால் தொழில்விருத்தி, பணப்புழக்கம், வியாபாரிகளுக்கு பணப்புழக்கம், தகுதியான வேலை, இலாபம் பெருகும், சொத்து சேரும். அமரும் இடத்தில் குரு பகவான் தாழ்ந்தாலும் பார்வைப் பலத்தால் உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டுசெல்வார். 75% நன்மையுண்டு. ஆஞ்சநேயருக்கு வெற்றிலைமாலை. சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம். பசு மாட்டிற்கு அகத்திக் கீரை வழங்கிவாருங்கள். நன்மையுண்டாம். (தொடரும்)
குரு, கேது கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1– 5
பொருந்தா எண்: 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ்சிகப்பு
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)