சுக்கிலபட்ச சதுர்த்தசி திதி காலை 9.08 வரை. அதன் மேல் பௌர்ணமி திதி. சித்திரை நட்சத்திரம் நாள் முழுவதும். நட்சத்திர திரிதியை பிருக்கு. சிரார்த்த திதி பௌர்ணமி சித்தயோகம். சமநோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் உத்திரட்டாதி. சுபநேரங்கள் பகல் 10.30 – 11.30. பிற்பகல் 12.30 – 1.30 ராகு காலம் 1.30 – 3.00. எமகண்டம் 6.00 – 7.30 குளிகை காலம் 9.00 – 10.30 வார சூலம் – தெற்கு (பரிகாரம் – தைலம்) சித்ரா பௌர்ணமி சித்ரகுப்த பூஜை. இசை ஞானியார் குரு பூஜை தினம் சித்திரைச் சித்திரை இன்று மதுர கவியாழ்வார் திருநட்சத்திரம்.
மேடம் : சந்தோஷம், இன்பம்
இடபம் : புகழ், பெருமை
மிதுனம் : நேர்மை, செல்வாக்கு
கடகம் : ஓய்வு, அசதி
சிம்மம் : ஈகை, புண்ணியம்
கன்னி : சினம், பகை
துலாம் : லாபம், லஷ்மீகரம்
விருச்சிகம் : பிரயாணம், அலைச்சல்
தனுசு : கவனம், எச்சரிக்கை
மகரம் : தோல்வி, கவலை
கும்பம் : அன்பு, பாசம்
மீனம் : வாழ்வு, வளம்
குலசேகராழ்வார் அருளிய பெருமாள் திருமொழி திருக்கண்ணபுரம் பெருமை ஸ்ரீராமர் தலாட்டு பாசுரம். “கொங்குமலி கருங்குழலாள் கௌசலை தன் குலமதலாய்! தங்குபுகழ்ச் சனகன் திருமருகா! தாசரதீ! கங்கையிலும் தீர்த்த மலி கணபுரத்தென் கருமணியே! எங்கள் குலத்தின்னமுதே! இராகவனே! தாலேலோ!” பொருளுரை; வாசனை மிக்க கருங்கூந்தலை உடைய கௌசல்யை குலத்தை விளங்க வைத்தவனே! பெரும்புகழை நிரந்தரமாகப் பெற்றிருக்கும் ஜனகனின் மருமகனே. தசரதனின் செல்வமே கங்கையிலும் புனிதமான தீர்த்தங்களையுடைய திருக்கண்ணபுரத்தில் அருள் செய்யும் என் கண்ணின் கருமணிபோன்றவனே! என் இனிய அமுதமே! உன்னைத் தலாட்டுகிறேன். (ஆழ்வார் திருவடிகளே சரணம்)
குரு, கேது கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட இன்று
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5
பொருந்தா எண்கள்: 6, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், ஊதா நிறங்கள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)