10.10.2019 ஸ்ரீவிகாரி வருடம் புரட்டாதி மாதம் 23 ஆம் நாள் வியாழக்கிழமை
சுக்கிலபட்ச துவாதசி திதி முன்னிரவு 09.21 வரை. அதன்மேல் திரயோதசி திதி. சதயம் நட்சத்திரம். பின்னிரவு 04.19 வரை. பின்னர் பூரட்டாதி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை துவாதசி. மரணயோகம். மேல்நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரம் மகம் சுபநேரங்கள் காலை 09.15 –10.15, மாலை 04.45–05.45 ராகுகாலம் 10.30–12.00 எமகண்டம் 03.00–04.30 குளிகைகாலம் 07.30 –09.00 வாரசூலம் மேற்கு பரிகாரம் வெல்லம் கோத்துவாதசி. நரசிங்கமுனையரையர் நாயனார் குருபூஜை.
மேடம் :விருத்தி, மேன்மை
இடபம் :நலம், ஆரோக்கியம்
மிதுனம் :அசதி, ஓய்வு
கடகம் :சிரமம், தடை
சிம்மம் :லாபம், லக்ஷ்மீகரம்
கன்னி :நட்பு, உதவி
துலாம் :பக்தி, ஆசி
விருச்சிகம் :நன்மை, அதிஷ்டம்
தனுசு :வெற்றி, யோகம்
மகரம் :களிப்பு, மகிழ்ச்சி
கும்பம் :சோர்வு, அசதி
மீனம் :போட்டி, ஜெயம்
தெகிவளை ஸ்ரீவெங்டேஸ்வர மகாவிஷ்ணு மூர்த்தி தேவஸ்தானம் பிரம்மோற்சவம். எதிர்வரும் 28.10.2019 திங்கள் பின்னிரவு 3 மணி 49 நிமிடத்தில் குருபகவான். தனுசு ராசிக்குள் பிரவேசிக்கிறார். குருமாற்றம் பலன்கள். அவர் பார்வையினால் பலன்களால் யார் யாருக்கு நன்மை என்ற விபரங்கள் நாளை முதல் தொடரும்.
("அனுபவம் என்பது ஒரு மனிதனுக்கு என்ன நேரிடுகிறது என்பதல்ல. அதைக்கொண்டு அவன் என்ன செய்கிறான் என்பதுதான்")
சூரியன், புதன் கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட இன்று.
அதிஷ்ட எண்கள் 1 5
பொருந்தா எண் 8
அதிஷ்ட வர்ணங்கள் மஞ்சள், சாம்பல் நிறங்கள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)