02.10.2019 ஸ்ரீவிகாரி வருடம் புரட்டாதி மாதம் 15 ஆம் நாள் புதன்கிழமை
சுக்கில பட்ச சதுர்த்தி திதி மாலை 5.07 வரை. அதன் மேல் பஞ்சமி திதி. விசாகம் நட்சத்திரம் மாலை 6.42 வரை. பின்னர் அனுஷம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை சதுர்த்தி. சித்தயோகம். கீழ்நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் அஸ்வினி, பரணி. சுபநேரங்கள்; பகல் 10.45–11.45 மாலை 4.45–5.45. ராகுகாலம் 12.00 –1.30, எமகண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30–12.00, வாரசூலம்– வடக்கு (பரிகாரம் –பால்) சதுர்த்தி விரதம், நவராத்திரி விரதம், மகாலக் ஷ்மி பூஜை. தெஹிவளை விஷ்ணு ஆலயத்தில் விஷ்வக் சேன கணபதி ஷோகம். பிரம்மோற்சவ உற்சவ ஆரம்பம்.
மேடம் : பக்தி, ஆசி
இடபம் : அமைதி, சாந்தம்
மிதுனம் : சிரமம், தடை
கடகம் : யோகம், அதிர்ஷ்டம்
சிம்மம் : களிப்பு, மகிழ்ச்சி
கன்னி : நஷ்டம், விரயம்
துலாம் : தனம், சம்பத்து
விருச்சிகம் : பிரயாணம், அலைச்சல்
தனுசு : ஊக்கம், உயர்வு
மகரம் : புகழ், செல்வாக்கு
கும்பம் : கோபம், சினம்
மீனம் : புகழ், செல்வாக்கு
புரட்டாதி மாதம் திருமலை திருப்பதி பிரம்மோற்சவம். திரேதா யுகத்தில் திருமலை பெற்ற நாமம் அஞ்சனாத்ரி. சிறிய திருவடி என்று போற்றப்படும் ஆஞ்சநேயனை அவன் தாயார் அஞ்சனா தேவி தவமிருந்து பெற்றது திருமலையில். ஆதலால் அஞ்சனாத்ரி என்று இம்மலை உண்டானது. மூன்றாவது யுகமான துவாபர யுகத்தில் இம்மலை சேஷாத்திரி சேஷாசலம் என்று பெயர் உண்டானது. மகாவிஷ்ணுவை தரிசனம் செய்ய வாயுபகவான் சென்றவேளை, ஆதிசேடன் பிறகு வரும்படி கூற இருவருக்குள் யார் பெரியவர் என்று தர்க்கம் ஏற்பட உண்டான வரலாறு நாளை தொடரும்.
சந்திரன், சுக்கிரன் ஆதிக்கம் கொண்ட இன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 7, 6
பொருந்தா எண்கள்: 9, 8, 3
அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை கலந்த நிறங்கள்.
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)