12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (01.10.2019)..!

2019-10-01 10:04:49

01.10.2019 ஸ்ரீவி­காரி வருடம் புரட்­டாதி மாதம் 14 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச திரி­தியை திதி மாலை 06.37 வரை. அதன்மேல் சதுர்த்தி திதி. சுவாதி நட்­சத்­திரம் முன்­னி­ரவு 07.29 வரை. பின்னர் விசாகம் நட்­சத்­திரம் சிரார்த்த திதி வளர்­பிறை திரி­தியை. சித்­த­யோகம் முன்­னி­ரவு 07.29 வரை. பின்னர் மர­ண­யோகம். சம­நோக்­குநாள் சந்­தி­ராஷ்­டமம் ரேவதி, அஸ்­வினி. சுப­நே­ரங்கள்: பகல் 10.45– 11.45, மாலை 04.45– 05.45, ராகு­காலம் 03.00– 04.30, எம­கண்டம் 09.00– 10.30, குளி­கை­காலம் 12.00–01.30, வார­சூலம்–வடக்கு (பரி­காரம்–பால்) நவ­ராத்­திரி விரதம். துர்க்கைப் பூஜை. 

மேடம் தனம், சம்­பத்து

இடபம் பிரீதி, மகிழ்ச்சி

மிதுனம் நலம், ஆரோக்­கியம் 

கடகம் வெற்றி, யோகம்

சிம்மம் ஓய்வு, அசதி

கன்னி ஆர்வம், முன்­னேற்றம் 

துலாம் களிப்பு, மகிழ்ச்சி 

விருச்­சிகம் சிக்கல், சங்­கடம் 

தனுசு பகை, விரோதம்

மகரம் தெளிவு, அமைதி

கும்பம் உயர்வு, மேன்மை

மீனம் ஊக்கம், உயர்வு

திரு­மலை புரட்­டாதி பிர­மோற்­சவம். கிரு­த­யு­கத்தில் இம்­மலை பெற்ற பெயர் ரிஷ­பாத்ரி, ரிஷ­பா­சுரன் என்ற அசுரன் விஷ்­ணுவை நோக்கி ஐயா­யிரம் வரு­டங்கள் இம்­ம­லையில் தவம் செய்தான். தன் தலையை தானே வெட்டிக்கொண்டு தவம் செய்ய விஷ்­ணுவும் வந்து தோன்றி என்ன வரம் வேண்டும் என வினவ உன்­னோடு யுத்தம் செய்ய வேண்டும்  அசுரன் கேட்க பல நாட்கள் யுத்தம் நடந்து கடை­சியில் இவனை முடிப்போம் என்று விஷ்­ணுவும் கையில் சக்­க­ரா­யு­தத்தை எடுக்க தான் முடிந்து போகப்­போ­வதை உணர்ந்த அசுரன் மீண்டும் விஷ்­ணுவைப் பிரார்த்­திக்க என்ன வரம் வேண்­டு­மென்று விஷ்ணு கேட்க. அசுரன் நான் தவம் செய்த கார­ணத்தால் என்­பெயர் இம்­ம­லைக்கு கிரு­த­யு­கத்தில் உண்­டாக வேண்­டு­மென்று வரம் கேட்க விஷ்­ணுவும் அசு­ரனைக் கொன்று அம்­மலை ரிஷ­பாத்ரி, ரிஷ­பா­ஷலம் என்று வழங்­க­லா­யிற்று. நாளை இரண்டாம் யுகத்தில் அஞ்­ச­னாத்ரி (தொடரும்)

சூரியன் புதன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்          :  1, 5

பொருந்தா எண்            :  8

அதிஷ்ட வர்ணங்கள்      :   மஞ்சள், நீலம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right