01.10.2019 ஸ்ரீவிகாரி வருடம் புரட்டாதி மாதம் 14 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை
சுக்கிலபட்ச திரிதியை திதி மாலை 06.37 வரை. அதன்மேல் சதுர்த்தி திதி. சுவாதி நட்சத்திரம் முன்னிரவு 07.29 வரை. பின்னர் விசாகம் நட்சத்திரம் சிரார்த்த திதி வளர்பிறை திரிதியை. சித்தயோகம் முன்னிரவு 07.29 வரை. பின்னர் மரணயோகம். சமநோக்குநாள் சந்திராஷ்டமம் ரேவதி, அஸ்வினி. சுபநேரங்கள்: பகல் 10.45– 11.45, மாலை 04.45– 05.45, ராகுகாலம் 03.00– 04.30, எமகண்டம் 09.00– 10.30, குளிகைகாலம் 12.00–01.30, வாரசூலம்–வடக்கு (பரிகாரம்–பால்) நவராத்திரி விரதம். துர்க்கைப் பூஜை.
மேடம் தனம், சம்பத்து
இடபம் பிரீதி, மகிழ்ச்சி
மிதுனம் நலம், ஆரோக்கியம்
கடகம் வெற்றி, யோகம்
சிம்மம் ஓய்வு, அசதி
கன்னி ஆர்வம், முன்னேற்றம்
துலாம் களிப்பு, மகிழ்ச்சி
விருச்சிகம் சிக்கல், சங்கடம்
தனுசு பகை, விரோதம்
மகரம் தெளிவு, அமைதி
கும்பம் உயர்வு, மேன்மை
மீனம் ஊக்கம், உயர்வு
திருமலை புரட்டாதி பிரமோற்சவம். கிருதயுகத்தில் இம்மலை பெற்ற பெயர் ரிஷபாத்ரி, ரிஷபாசுரன் என்ற அசுரன் விஷ்ணுவை நோக்கி ஐயாயிரம் வருடங்கள் இம்மலையில் தவம் செய்தான். தன் தலையை தானே வெட்டிக்கொண்டு தவம் செய்ய விஷ்ணுவும் வந்து தோன்றி என்ன வரம் வேண்டும் என வினவ உன்னோடு யுத்தம் செய்ய வேண்டும் அசுரன் கேட்க பல நாட்கள் யுத்தம் நடந்து கடைசியில் இவனை முடிப்போம் என்று விஷ்ணுவும் கையில் சக்கராயுதத்தை எடுக்க தான் முடிந்து போகப்போவதை உணர்ந்த அசுரன் மீண்டும் விஷ்ணுவைப் பிரார்த்திக்க என்ன வரம் வேண்டுமென்று விஷ்ணு கேட்க. அசுரன் நான் தவம் செய்த காரணத்தால் என்பெயர் இம்மலைக்கு கிருதயுகத்தில் உண்டாக வேண்டுமென்று வரம் கேட்க விஷ்ணுவும் அசுரனைக் கொன்று அம்மலை ரிஷபாத்ரி, ரிஷபாஷலம் என்று வழங்கலாயிற்று. நாளை இரண்டாம் யுகத்தில் அஞ்சனாத்ரி (தொடரும்)
சூரியன் புதன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று
அதிர்ஷ்ட எண்கள் : 1, 5
பொருந்தா எண் : 8
அதிஷ்ட வர்ணங்கள் : மஞ்சள், நீலம்