20.09.2019 ஸ்ரீவிகாரி வருடம் புரட்டாதி மாதம் 03 ஆம் நாள் வெள்ளிக்கிழமை
கிருஷ்ணபட்ச சஷ்டி திதி மாலை 04.50 வரை. அதன்மேல் ஸப்தமி திதி. கார்த்திகை நட்சத்திரம் காலை 08.20 வரை. பின்னர் ரோகிணி நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை சஷ்டி சித்தயோகம் காலை 08.20 வரை. பின்னர் மரணயோகம் கீழ்நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரம் அனுஷம் சுபநேரங்கள் காலை 9.15 – 10.15 மாலை 4.45 – 5.45 ராகுகாலம் 10.30 –12.00 எமகண்டம் 3.00 –4.30 குளிகைகாலம் 7.30 –9.00 வாரசூலம் மேற்கு (பரிகாரம் வெல்லம்) திருநாளைப் போவார் நாயனார் குருபூஜை. சஷ்டி விரதம். ரோகிணி நட்சத்திரம் கண்ணனை வழிபடல் நன்று.
மேடம் : உயர்வு, மேன்மை
இடபம் : கவலை, கஷ்டம்
மிதுனம் : தடை, தாமதம்
கடகம் : இலாபம், லக்ஷ்மிகரம்
சிம்மம் : அச்சம், பகை
கன்னி : பகை, விரோதம்
துலாம் : வரவு, இலாபம்
விருச்சிகம் : தனம், இலாபம்
தனுசு : நன்மை, அதிஷ்டம்
மகரம் : செலவு, விரயம்
கும்பம் : இலாபம், ஆதாயம்
மீனம் : சுகம், ஆரோக்கியம்
புரட்டாதி மாதம். இம்மாதம் முழுவதும் ஸ்ரீவெங்கடேஸ்வரப் பெருமாளுக்கு உரியது. "வேங்க டாத்திரி சமஸ்தானம். பிரம்மாண்டே நாஸ்தி கிஞ்சன. வேங்கடேச சமோ தேவோ நபூதோ நபவிஸ்யதி" என்று பவிஷோத்ர புராணம் கூறுகின்றது. இக்கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்குபவன் ஸ்ரீவேங்கடேசப் பெருமான். இவ்வுலகம் அவன் ஆஸ்தானம். ஆகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனாய் விளங்கும் அவனுக்கு நிகரான தெய்வமேதுமில்லை. எத்தனை புராணங்கள் அவன் புகழைப் பாடிற்று பத்ம புராணம், பவிஷேத்ர புராணம், கருட புராணம், விஷ்ணு புராணம், வேங்கடேச மகாத்மியம், ஆழ்வார்களின் திவ்ய சூக்திகள் என்று பல விடதம். நாளை வேங்கடேச என்ற சொல்லின் பொருள் (தொடரும்)
சந்திரன், புதன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிஷ்ட எண்கள் – 1, 5, 7
பொருந்தா எண்கள் – 9, 8, 6
அதிஷ்ட வர்ணங்கள் – லேசான பச்சை, மஞ்சள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)