17.09.2019 ஸ்ரீவிகாரி வருடம் ஆவணி மாதம் 31 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை
கிருஷ்ணபட்ச திரிதியை திதி மாலை 03.27 வரை. பின்னர் சதுர்த்தி திதி. அஸ்வினி நட்சத்திரம் நாள் முழுவதும் (நட்சத்திர திரிதியை பிருக்) சிரார்த்த திதி சூன்யம். சமநோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரம் சித்திரை. சுபநேரங்கள் காலை 07.45–08.45 மாலை 4.45–5.45 ராகுகாலம் 03.00–04.30 எமகண்டம் 09.00–10.30 குளிகைகாலம் 12.00–01.30 வாரசூலம் வடக்கு (பரிகாரம் பால்) ஷடசீதி புண்ய காலம் சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகப் பெருமானை வழிபடல் நன்று.
மேடம் :யோகம், அதிஷ்டம்
இடபம் :செலவு, விரயம்
மிதுனம் :ஓய்வு அசதி
கடகம் :அன்பு, பாசம்
சிம்மம் :தனம், லாபம்
கன்னி :கவனம், எச்சரிக்கை
துலாம் :புகழ், பெருமை
விருச்சிகம் :அச்சம், பகை
தனுசு :புகழ், பாராட்டு
மகரம் :நற்செயல், பாராட்டு
கும்பம் :ஜெயம், புகழ்
மீனம் :காரியசித்தி, அனுகூலம்
எதிர்வரும் சனிக்கிழமை புரட்டாதி சனிவாரம் ஆகும். விஷ்ணு பகவானைக் குறித்தும் சனீஸ்வரரைக் குறித்தும் அனுஷ்டிக்கப்படும் விரத நாள் இதுவாகும். புரட்டாதி (கன்னி) மாதா கன்னிகா விருட்சம் வியாபகமாக்கப்பட்ட தினம் ஆகும். சூரிய சக்திகளில் ஒன்றாகிய இச்சக்தி, இச்சையின் வடிவமாகிய காக வாகனத்துடன் சனீஸ்வரன் உதித்த தினமும் புரட்டாதி சனி வாரமாகும். இயற்கையாகவே சனிஸ்வரன் சாந்த குணமுடையவன். விஸ்வகர்மாவின் மகளை மணந்து வாழ்வின்பம் நுகராது மனைவியினால் "உமது பார்வை படுமிடமெல்லாம் கருகி போவதாக" என்று சபிக்கப்பட்டவர். ஒருவர் யாதகத்தில் இவர் அமையும் இடத்தைப் பற்றி புரட்டாதி மாதத்தில் எழுதுவது மிகவும் பொருத்தம். (தொடரும்)
("ஓர் அரசியல்வாதி அடுத்த தேர்தலைப் பற்றி எண்ணுகிறான். ஓர் இராஜதந்திரி அடுத்த தலைமுறையைப் பற்றி எண்ணுகிறான்" ஜேம்ஸ் கிளார்க்)
சனி சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிஷ்ட எண்கள் 1, 5, 7
பொருந்தா எண்கள் 8, 9
அதிஷ்ட வர்ணங்கள் மஞ்சள், பச்சை
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)