09.09.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஆவணி மாதம் 23 ஆம் நாள் திங்கட்கிழமை
சுக்கிலபட்ச ஏகாதசி திதி. பின்னிரவு 3.27 வரை. அதன் மேல் துவாதசி திதி. பூராடம் நட்சத்திரம் பகல் 12.43 வரை. அதன் மேல் உத்திராடம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை ஏகாதசி. சித்தயோகம் பகல் 12.43 வரை. பின்னர் மரணயோகம். கீழ் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: மிருகசீரிஷம், திருவாதிரை. சுபநேரங்கள்: காலை 9.15 – 10.15, மாலை 4.45 – 5.45, ராகுகாலம் 7.30 – 9.00, எமகண்டம் 10.30 – 12.00, குளிகைகாலம் 1.30 – 3.00. வாரசூலம் – கிழக்கு (பரிகாரம் – தயிர்) இன்று மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் புட்டுத் திருவிழா. வைகை ஆற்றில் சிவபெருமான் பிட்டுக்கு மண்சுமந்த லீலை.
மேடம் : திடம், நம்பிக்கை
இடபம் : உதவி, உபகாரம்
மிதுனம் : கவனம், அவதானம்
கடகம் : நட்பு, உதவி
சிம்மம் : தனம், சம்பத்து
கன்னி : வெற்றி, அதிர்ஷ்டம்
துலாம் : உயர்வு, மேன்மை
விருச்சிகம் : புகழ், செல்வாக்கு
தனுசு : அன்பு, ஆதரவு
மகரம் : தனலாபம், செல்வம் கும்பம் : ஊக்கம், உயர்வு
மீனம் : சுபம், மங்களம்
இன்று சுக்கிலபட்ச ஸர்வ ஏகாதசி விரதம். இதற்கு விஷ்ணு பரிவர்தன ஏகாதசி (பத்ம நாபா ஏகாதசி) என்ற பெயர்கள் உண்டு. ஸ்ரீ மகாவிஷ்ணு திருப்பாற்கடலில் பள்ளி கொண்டு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. இடம் இருந்து வலமாக அவர் திரும்பிப் படுத்த நாளிது. திருமால் தூங்கினாரா? அல்லது தூங்குவதைப் போல் நடிக்கிறாரா? அவர் தூங்கினால் உலகம் இயங்குமா? இதனை அருணாசலகவி “ஏன் பள்ளி கொண்டீர் ஐயா-?” என்றும், திருமங்கையாழ்வார் திருச்சந்த விருத்தத்தில் “நடந்த கால்கள் நொந்ததுவோ” என்ற பாசுரத்தில் அன்று இராமாவதாரத்தில் அயோத்தியிலிருந்து ஸ்ரீலங்கா வரை நடந்து வந்தாய். அதனால் உன் கால்கள் வலித்து உறங்குகின்றாயா? என்று கேசவனைப் பார்த்து கேட்கின்றார். ஸ்ரீ விஷ்ணுவை வழிபடு வோம். வெற்றிகள் பெறுவோம்.
செவ்வாய், குரு ஆதிக்கம் கொண்ட இன்று,
அதிர்ஷ்ட எண்கள்: 5 – 3 – 9
பொருந்தா எண்கள்: 2 – 6 – 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், சிவப்பு
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)