04.09.2019 ஸ்ரீவிகாரி வருடம் ஆவணி மாதம் 18 ஆம் நாள் புதன்கிழமை
சுக்கிலப்பட்ச சஷ்டி திதி பின்னிரவு 04.15 வரை. அதன்மேல் ஸப்தமி திதி. சுவாதி நட்சத்திரம் பகல் 11.36 வரை. பின்னர் விசாகம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை சஷ்டி சித்தயோகம் சமநோக்குநாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் ரேவதி அஸ்வினி சுபநேரங்கள் பகல் 10.45 – 11.45 மாலை 03.00 – 04.00 ராகுகாலம் 12.00 01.30 எமகண்டம் 07.30 – 09.00 குளிகைகாலம் 10.30 – 12.00 வாரசூலம் வடக்கு (பரிகாரம் பால்) சஷ்டி விரதம் முருகப்பெருமானை வழிபடல் நன்று. சுபமுகூர்த்த நாள்.
மேடம் : களிப்பு, சந்தோஷம்
இடபம் :இன்பம், மகிழ்ச்சி
மிதுனம் :வெற்றி, அதிஷ்டம்
கடகம் :நலம், ஆரோக்கியம்
சிம்மம் :சங்கடம், தடங்கல்
கன்னி :வரவு, லாபம்
துலாம் :பகை, விரோதம்
விருச்சிகம் :சிக்கல், சங்கடம்
தனுசு :புகழ், பெருமை
மகரம் :உயர்வு, மேன்மை
கும்பம் :பணம், பரிசு
மீனம் :யோகம், அதிஷ்டம்
கலியுகத்தின் முடிவில் பகவானின் லீலா விபூதியான இவ்வுலகம் சகல புவனங்கள் அழியும் நித்ய விபூதியான ஸ்ரீவைகுண்டம் அழியாது. தோன்றும் அழியும் மீண்டும் தோன்றும் மீண்டும் அழியும் என்பது இறைவனுடைய லீலை. (விளையாட்டுக்கு) உட்படுவதால் லீலா விபூதி என்று பூமண்டலம் அழைக்கப்படுகின்றது. அழிவே இல்லாததால் ஸ்ரீவைகுண்டம் நித்ய விபூதியாகின்றது. பிரளயத்தில் சகல புவனங்களும் அழிய மீண்டும் பகவானின் புண்ணிய வாசனையால் கிருதயுகம் பூசம் நட்சத்திரம் கடகராசியில் சூரியன், சந்திரன் குரு கடகராசியில் இலக்கினத்தில் இருக்க பிறக்கும் சாத்வீக குணத்தோடு மக்கள் தோன்றுவார்கள். (தொடரும்)
ராகு, கேது கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிஷ்ட எண்கள் 2 1 5 6
பொருந்தா எண்கள் 7 4 8
அதிஷ்ட வர்ணங்கள் மஞ்சள், நீலம்
இராமரத்தினம் ஜோதி
(தெகிவளை ஸ்ரீவிஷ்ணுகோயில்)