02.09.2019 ஸ்ரீவிகாரி வருடம் ஆவணி மாதம் 16ஆம் நாள் திங்கட்கிழமை.
சுக்கிலபட்ச திரிதியைதிதி காலை 9.44 வரை. அதன் மேல் சதுர்த்தி திதி அஸ்தம் நட்சத்திரம் பிற்பகல் 1.56 வரை பின்னர் சித்திரை நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை சதுர்த்தி சித்த யோகம் சமநோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் பூரட்டாதி உத்திரட்டாதி சுபநேரங்கள் காலை 9.15–10.15, மாலை 4.45–5.45, ராகுகாலம் 7.30–9.00, எமகண்டம 10.30–12.00, குளிகை காலம் 1.30–3.00 வாரசூலம் கிழக்கு (பரிகாரம் -தயிர்) சுபமுகூர்த்த நாள்.
மேடம் : செலவு, விரயம்
இடபம் : வெற்றி, அதிர்ஷ்டம்
மிதுனம் : நோய், வருத்தம்
கடகம் : சிக்கல், சங்கடம்
சிம்மம் : முயற்சி, முன்னேற்றம்
கன்னி : கவலை, கஷ்டம்
துலாம் : பிணி, பீடை
விருச்சிகம் : சுபம், மங்கலம்
தனுசு : மகிழ்ச்சி, சந்தோஷம்
மகரம் : புகழ், பெருமை
கும்பம் : அன்பு, ஆதரவு
மீனம் : பயம், பகை
இன்று ஆவணி மாதம் விநாயக சதுர்த்தி விரதம். பிரணவப் பொருள் ஓங்காரம். ஓங்காரத்திலிருந்தே உலகம் தோன்றிற்று. பிரம்ம தேவன் விடுத்த கொட்டாவியில் தோன்றியவன் சிந்தூரன், அவன் யாரையாவது அன்பால் தடவினால் அவர்கள் உடல் நீறாய்போய்விடும் என்ற வரத்தைப் பெற்றவன். அவன் வெள்ளியங்கிரியில் உமா தேவியுடன் வீற்றிருந்த சிவனை தடவி அனலாக்கச் செல்ல வினாயகர் பிராமண வடிவம் கொண்டு இடையில் பராயுசத்தை நாட்ட, சிந்தூரன் பூமியில் வந்து விழுந்த தினமே ஆவணியில் விநாயக சதுர்த்தியாக கொண்டாடப்படும் நாள். சிவனே உகந்த விநாயகரை பூஜித்த தினம் இன்றாகும். இன்று விநாயகப் பெருமானை வழிபடல் நன்று. (கல்கி அவதாரம் நாளை தொடரும்) சந்திரன், புதன் ஆதிக்கம் கொண்ட இன்று.
அதிர்ஷ்ட எண்கள் 1,5,7.
பொருந்தா எண்கள் 9,8,6.
அதிர்ஷ்ட வர்ணங்கள் பச்சை, மஞ்சள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)