27.08.2019 ஸ்ரீவிகாரி வருடம் ஆவணி மாதம் 10 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை
கிருஷ்ணபட்ச துவாதசி திதி முன்னிரவு 11.31வரை. அதன்மேல் திரயோதசித்திதி புனர்பூசம் நட்சத்திரம் முன்னிரவு 11.00 மணி வரை. பின்னர் பூசம் நட்சத்திரம் சிரார்த்த திதி தேய்பிறை துவாதசி சித்தயோகம் சமநோக்குநாள். சத்திராஷ்டம நட்சத்திரங்கள் மூலம், பூராடம் சுபநேரங்கள் பகல் 10.30 –11.30 மாலை 4.45 –5.45 ராகுகாலம் 3.00 –4.30 எமகண்டம் 9.00 –10.30 குளிகைகாலம் 12.00 –1.30 வாரசூலம் வடக்கு (பரிகாரம் பால்) வியதிபாத சிரார்த்தம்.
மேடம் : வெற்றி, அதிஷ்டம்
இடபம் : வரவு, இலாபம்
மிதுனம் : கவலை, கஷ்டம்
கடகம் : கவனம், எச்சரிக்கை
சிம்மம் : நலம், ஆரோக்கியம்
கன்னி : விவேகம், வெற்றி
துலாம் : திறமை, முன்னேற்றம்
விருச்சிகம் : ஜெயம், புகழ்
தனுசு : பகை, விரோதம்
மகரம் : உயர்வு, மேன்மை
கும்பம் : மகிழ்ச்சி, முன்னேற்றம்
மீனம் : நஷ்டம், கவலை
செவ்வாய் ஜெயந்தி 31.08.2019 சனி இவர் வரலாறு சிவபெருமான் யோகத்திலிருந்தபோது அவர் நெற்றிக்கண்ணில் இருந்து வியர்வை பூமியில் விழுந்தது. அதிலிருந்து குழந்தை உண்டாக பூமாதேவி அக்குழந்தையை வளர்த்தாள். முருகனின் அம்சமாதலால் முருகனின் சகோதரனாக ஜோதிடம் கொண்டாடுகிறது. பூமாதேவி வளர்த்தலால் பூமி அம்சம் பொருந்தலாயிற்று. பௌமன் எனப் பெயர் பெற்றார். இவர்தோஷம் விலக முருகனை வழிபடல் சிறப்பு. இவரை வழிபட அங்காரக சதுர்த்தசி மிகவும் சிறப்பு. இவருக்கு குஜன், மங்கலன் என சிறப்புப் பெயர்களும் உண்டு. உஷ்ணம், அச்ருமுகம், வியாலம், ருதிரானம், நிஸ்திரிம்சம் என ஐந்து முகங்கள் செவ்வாய்க்கு உண்டு என்று சித்தாந்த நூல்கள் கூறுகின்றன (நாளை இவரின் மூல மந்திரம் தொடரும்)
செவ்வாய், சந்திரன் கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட இன்று.
அதிஷ்ட எண்கள் 3 5 6
பொருந்தா எண்கள் 2 9 8
அதிஷ்ட வர்ணம் நீலம், மஞ்சள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)