சுக்கிலபட்ச துவிதியை திதி பகல்12.42 வரை. அதன் மேல் திரிதியை திதி. பரணி நட்சத்திரம் பின்னிரவு 12.12 வரை. பின்னர் கார்த்திகை நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை திரிதியை சித்தாமிர்தயோகம். கீழ்நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் அஸ்தம், சித்திரை. சுபநேரங்கள் காலை 7.30 – 8.30. மாலை 4.30 – 5.30 ராகுகாலம் 9.00 – 10.30. எமகண்டம் 1.30 – 3.00. குளிகை காலம் 6.00 – 7.30 வார சூலம் கிழக்கு. (பரிகாரம் – தயிர்) சௌபாக்கிய கௌரிவிரதம்.
மேடம் : துணிவு, முன்னேற்றம்
இடபம் : பக்தி, ஆசி
மிதுனம் :நட்பு, உதவி
கடகம் : நலம், ஆரோக்கியம்
சிம்மம் : தனம், சம்பத்து
கன்னி : இன்பம், மகிழ்ச்சி
துலாம் : போட்டி, ஜெயம்
விருச்சிகம் : புகழ், பெருமை
தனுசு : செலவு, பற்றாக்குறை
மகரம் : உண்மை, உறுதி
கும்பம் : சுகம், ஆரோக்கியம்
மீனம் : நிறைவு, மகிழ்ச்சி
பெரியாழ்வார் திருமொழி முதல் பத்து நான்காம் திருமொழி கண்ணன் தாலாட்டு பாசுரம் " சங்கின் வலம் புரியும் சேவடி கிண்கிணியும் அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும் அங்கன் விசும்பில் அமரர்கள் போர்த்தந்தார் செங்கண் கருமுகிலே தாலேலோ! தேவகிச்சிங்கமே தாலேலோ! பொருளுரை: தேவர்கள் அனைவரும் சங்கில் உயர்ந்ததான வலம்புரியையும் திருவடிகளுக்கு சதங்கைளையும் அழகிய முன் சரிவளையும் தங்க அரைஞாண் கயிறும் திருமார்பில் அணிய நாணும் அனுப்பியுள்ளனர். சிவந்த திருக்கண்களையுடைய கார்மேகம் போன்றவனே! தேவகி வயிற்றில் பிறந்த சிங்கமே உன்னைத் தாலாட்டுகிறேன். ஆழ்வார் திருவடிகளே சரணம்.
செவ்வாய், ராகு கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6
பொருந்தா எண்கள்: 2, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: இளஞ் சிவப்பு, நீலம், மஞ்சள்