28.05.2019 ஸ்ரீ விகாரி வருடம் வைகாசி மாதம் 14 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.
கிருஷ்ண பட்ச நவமி திதி பகல் 01.07 வரை. அதன்மேல் தசமி திதி. பூரட்டாதி நட்சத்திரம் மாலை 6.40 வரை. பின்னர் உத்தரட்டாதி நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை தசமி. மரணயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் மகம், பூசம். சுபநேரங்கள்: பகல் 10.30–11.30. மாலை 4.30–5.30 ராகுகாலம் 3.00–4.30. எமகண்டம் 9.00–10.30. குளிகைகாலம் 12.00–1.30 வாரசூலம் – வடக்கு (பரிகாரம்– பால்).
மேடம் : உண்மை, உறுதி
இடபம் : நன்மை, அதிர்ஷ்டம்
மிதுனம் : நிறைவு, பூர்த்தி
கடகம் : தனம், சம்பத்து
சிம்மம் : கோபம், சினம்
கன்னி : பகை, விரோதம்
துலாம் : இன்பம், மகிழ்ச்சி
விருச்சிகம் : போட்டி, ஜெயம்
தனுசு : புகழ், பெருமை
மகரம் : செலவு, விரயம்
கும்பம் : வெற்றி, அதிர்ஷ்டம்
மீனம் : ஆசி, வாழ்த்து
கண்ணனின் ஐந்தாம் திருமுகம். ராஜ மன்னார் குடி என்ற ஸ்ரீ வைஷ்ணவ திவ்யதேசம் துவாரகையில் சேவை சாதிக்கும் கண்ணனையே இங்கு வண்துவாரகாபதி மன்னனாக நம்மாழ்வார் அனுபவித்தார். ஸ்ரீ ராஜகோபாலன் “கோ” சப்தம் பசுமாடுகளையும் “பாலன்” என்பது காப்பாளனையும் குறிக்கும். இடையர் குலத்திலே ராஜாவாக சேவை சாதிக்கின்றான். “உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள் அவனையல்லால் நும்மிச்சை சொல்லி நும்தோள் குலைக்கப்படும் அன்னை மீர்” மன்னப்படு மறைவாணனை வண்துவாரகாபதி மன்னனை ஏத்துமின் ஏத்துதலும் தொழுதாகுமே – நம்மாழ்வார் திருவாய் மொழி (4 – 6 – 10) (நாளை ஆறாம் திருமுகம் தொடரும்)
சூரியன், செவ்வாய் ஆதிக்கம் கொண்ட இன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1 – 5
பொருந்தா எண்கள்: 8 – 2
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள் கலந்த வர்ணங்கள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)