15.05.2019 ஸ்ரீ விகாரி வருடம் வைகாசி மாதம் 01 ஆம் நாள் புதன்கிழமை.
உத்தராயணம், வஸந்தருது ரிஷப மாதம்.
வளர்பிறை ஏகாதசி திதி காலை 9.47 வரை. அதன்மேல் துவாதசி திதி. உத்தரம் நட்சத்திரம் காலை 6.30 வரை. அதன்மேல் அஸ்தம் நட்சத்திரம். பின்னிரவு 5.10 வரை. பின்னர் சித்திரை நட்சத்திரம் (நட்சத்திர அவமாகம்) சிரார்த்த திதி சூன்யம். மரணயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் பூரட்டாதி. சுபநேரங்கள்: பகல் 10.30–11.30. மாலை 4.30–5.30 ராகுகாலம் 12.00–1.30. எமகண்டம் 7.30–9.00. குளிகைகாலம் 10.30–12.00 வாரசூலம் – வடக்கு (பரிகாரம்– பால்).
மேடம் : இலாபம், ஆதாயம்
இடபம் : சுகம், ஆரோக்கியம்
மிதுனம் : நிறைவு, மகிழ்ச்சி
கடகம் : வரவு, இலாபம்
சிம்மம் : செலவு, பற்றாக்குறை
கன்னி : தடை, தாமதம்
துலாம் : காரியசித்தி, அனுகூலம்
விருச்சிகம் : களிப்பு, மகிழ்ச்சி
தனுசு : வெற்றி, யோகம்
மகரம் : பிரிவு, கவலை
கும்பம் : மகிழ்ச்சி, சந்தோஷம்
மீனம் : கவலை, கஷ்டம்
விருஷப ரவி பகல் 11.31 விஷ்ணுபதி புண்ய காலம். சுக்கிலபட்ச சர்வ ஏகாதசி விரதம். இதற்கு மோகினி ஏகாதசி என்று பெயர். திருப்பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் மந்தர மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு கடைய மந்தர மலை சரிய திருமால் கூர்ம (ஆமை) அவதாரம் கொண்டு மலையை நிலைநிறுத்த, அமிர்தம் வெளிப்பட திருமால் மோகினி அவதாரம் எடுத்து வந்த நாள். இன்று புதன் ஜெயந்தி. புதனையும் மகாவிஷ்ணுவையும் வழிபட வித்தை ஞானம் பெருகும்.
சுக்கிரன், புதன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.
அதிர்ஷ்ட எண்: 9
பொருந்தா எண்கள்: 8–3
அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, நீலம், சிவப்பு கலப்பு வர்ணங்கள்.
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)