10.05.2019 ஸ்ரீ விகாரி வருடம் சித்திரை மாதம் 27 ஆம் நாள் வெள்ளிக்கிழமை
சுக்கிலப்பட்ச சஷ்டி திதி முன்னிரவு 9.32 வரை. அதன்மேல் ஸப்தமித் திதி. புனர் பூசம் நட்சத்திரம் பகல் 2.20 வரை. பின்னர் பூசம் நட்சத்திரம் சிரார்த்தத்திதி வளர்பிறை சஷ்டி சித்தயோகம் பகல் 2.20 வரை பின்னர் மரணயோகம் சமநோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் பூராடம் உத்திராடம் சுபநேரங்கள் காலை 9.30–10.30 மாலை 4.30 –5.30 வரை. ராகுகாலம் 10.30–12.00 எமகண்டம் 3.00–04.30 குளிகைகாலம் 07.30 09.00 வாரசூலம் மேற்கு (பரிகாரம் வெல்லம்) சுபமுகூர்த்த நாள்.
மேடம் - அமைதி, தெளிவு
இடபம் - நட்பு, உதவி
மிதுனம் - புகழ், செல்வாக்கு
கடகம் - அமைதி, சாந்தம்
சிம்மம் - களிப்பு, மகிழ்ச்சி
கன்னி - புகழ், பெருமை
துலாம் - நட்பு, உதவி
விருச்சிகம் - லாபம், லக்ஷ்மிகரம்
தனுசு - வெற்றி, அதிஷ்டம்
மகரம் - சுபம், மங்களம்
கும்பம் - செலவு, விரயம்
மீனம் - போட்டி, ஜெயம்
இன்று சுக்கிலப்பட்ச சஷ்டி விரதம் உபவாசமிருந்து முருகப்பெருமானை வழபடல் நன்று. ‘’சைவசித்தாந்தம்” ஆழ்வார்கள் காட்டும் சிவன் வடிவங்கள் கங்கையை சடை முடியில் அணிந்த சிவன் வடிவை கங்கையான் பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதியிலும் ஆறுசடைக்கரத்தான் திருமழிசையாழ்வார் (நாள் 4) இலும் வெள்ள நீர்ச்சடையான் (நம்மாழ்வார் 5 10 4) என வரும் தொடர்களில் குறித்துள்ளனர் திருமுடியில் கொன்றை மாலை அணிந்த சிவன் வடிவை ஆழ்வார்கள் பாடியவை நாளை தொடரும்.
(“யாராவது உன்னைக் காட்டிக்கொடுத்தால் அது அவர்கள் செய்த குற்றமாகும்” ருமேனிய பழமொழி)
சூரியன் செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிஷ்ட எண்– - 5
பொருந்தா எண்கள் –- 8 2
அதிஷ்ட வர்ணம் – - மஞ்சள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)