கிருஷ்ணபட்ச தசமி திதி பின்னிரவு 3.12 வரை. அதன் மேல் ஏகாதசி திதி.உத்தராடம் நட்சத்திரம் பகல்10.15 வரை திருவோணம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை தசமி. சித்தயோகம் மேல் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் புனர் பூசம். சுபநேரங்கள் காலை 7.30– 9.00, 10.30– 11.30, மாலை 4.30– 5.30 ராகு காலம் 9.00– 10.30, எமகண்டம் 1.30– 3.00, குளிகை காலம் 6.00– 7.30, வாரசூலம் கிழக்கு (பரிகாரம்– தயிர்) திருவோண விரதம்.
மேடம் அமைதி, நிம்மதி
இடபம் பகை, விரோதம்
மிதுனம் வரவு, லாபம்
கடகம் துன்பம், கவலை
சிம்மம் புகழ், பெருமை
கன்னி உயர்வு, மேன்மை
துலாம் ஈகை, புண்ணியம்
விருச்சிகம் மறதி, விரயம்
தனுசு பொறுமை, நிதானம்
மகரம் நிறைவு, பூர்த்தி
கும்பம் போட்டி, ஜெயம்
மீனம் அன்பு, பாசம்.
குலசேகராழ்வார் அருளிய பெருமாள் திருமொழி பாசுரம்" வானாளும் மாமதிபோல் வெண்குடைக் கீழ் மன்னவர்தம் கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன் தேனார் பூஞ் சோலைத் திருவேங்கட மலைமேல் கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே"! பொருளுரை: இரவிலே ஆகாயத்தை ஆளும் பூரண சந்திரனைப் போல் மன்னர்க் கெல்லாம் மன்னனாக அரசாளும் ராஜபோகத்தை வேண்டேன். தேன் நிறைந்த பூக்களைக் கொண்ட சோலைகளையுடைய திருவேங்கட மலை மீது ஒரு ஆறாக பாயும் பேறு கிடைத்தால் அதுவே பாக்கியமாகக் கருதுவேன். கோடைகாலத்தில் ஆறு வற்றிவிட்டால் என்ன செய்வது? என்று ஆழ்வார் மீண்டும் கலங்குகின்றார். (ஆழ்வார் திருவடிகளே சரணம்) (“குத்துவிளக்கு அதன் அடியில் ஒளி தருவதில்லை”) சந்திரன், சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்கநாளின்று
அதிர்ஷ்ட எண்கள்: 7, 6
பொருந்தா எண்கள்: 9, 8, 3
அதிர்ஷ்ட வர்ணம்: அடர் பச்சை