12.04.2019 விளம்பி வருடம் பங்குனி மாதம் 29 ஆம் நாள் வெள்ளிக்கிழமை
சுக்கில பட்ச ஸப்தமி திதி பகல் 10.56 வரை. அதன் மேல் அஷ்டமி திதி. திருவாதிரை நட்சத்திரம் காலை 7.37 வரை. பின்னர் புனர்பூசம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை அஷ்டமி. சித்தயோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் பூராடம். சுபநேரங்கள் காலை 9.30 –10.30, மாலை 4.30 –5.30, ராகுகாலம் 10.30 –12.00, எமகண்டம் 3.00 –4.30, குளிகை காலம் 7.30 – 9.00, வாரசூலம் மேற்கு. (பரிகாரம் வெல்லம்) சுபமுகூர்த்த நாள். நாளை தெஹிவளை விஷ்ணு ஆலயத்தில் ஸ்ரீராம நவமி உற்சவம்.
மேடம் : தனம், சம்பத்து
இடபம் : பகை, எதிர்ப்பு
மிதுனம் : வெற்றி, அதிர்ஷ்டம்
கடகம் : கவலை, கஷ்டம்
சிம்மம் : பகை, பயம்
கன்னி : நட்பு, உதவி
துலாம் : தடை, இடையூறு
விருச்சிகம் : தனம், சம்பத்து
தனுசு : சுகம், ஆரோக்கியம்
மகரம் : வரவு, இலாபம்
கும்பம் : களிப்பு, மகிழ்ச்சி
மீனம் : சிக்கல், சங்கடம்
''சைவ சித்தாந்தம்'' சிவலிங்கப் பகுதிகள். சிவனின் பரத்துவ நிலையை உணர்த்துவது சிவலிங்கம். இதன் மூன்று பகுதிகில் பாண உச்சிப்பகுதி சிவபாகம் எனவும் நடுப்பகுதியான ஆவுடையார் விஷ்ணுப் பகுதி எனவும் அடிப்புறப்பகுதி பிரம்ம பாகம் எனவும் கூறப்பெறும். இத்தத்துவம் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முப்பெரும் தொழில் தன்மையை இயற்றும் சிவனின் பரிபூரண நிலையை உணர்த்துகின்றது. சிவலிங்கத்தின் வகைகள் பராத்ரலிங்கம், சுயம்புலிங்கம், காணலிங்கம், தைவிகலிங்கம், திவ்யலிங்கம், ஆரிடலிங்கம், மானுடலிங்கம், இராட்சதலிங்கம், பாகைலிங்கம், சணிகலிங்கம், (நாளை தொடரும்)
குரு, சூரியன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5
பொருந்தா எண்கள்: 8, 9
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ்சிவப்பு
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)