18.03.2019 விளம்பி வருடம் பங்குனி மாதம் 04 ஆம் நாள் திங்கட்கிழமை
சுக்கில பட்ச துவாதசி திதி பகல் 2.44 வரை. பின்னர் திரயோதசி திதி. ஆயில்யம் நட்சத்திரம் முன்னிரவு 7.07 மணி வரை. பின்னர் மகம் நட்சத்திரம். திதித்வயம் சிரார்த்த திதி வளர்பிறை துவாதசி திரயோதசி. சித்தயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் உத்திராடம், திருவோணம். சுபநேரங்கள் காலை 9.30 –10.30, மாலை 4.30 –5.30, ராகுகாலம் 7.30 –9.00, எமகண்டம் 10.30 –12.00, குளிகை காலம் 1.30 –3.00, வாரசூலம் கிழக்கு. (பரிகாரம் தயிர்) சுக்கில பட்ச மகா பிரதோஷம் சிவவழிபாடு நந்தி தேவர் தரிசனம் நன்று.
மேடம் : ஜெயம், வெற்றி
இடபம் : புகழ், பெருமை
மிதுனம் : அசதி, சோர்வு
கடகம் : பகை, விரோதம்
சிம்மம் : உழைப்பு, உயர்வு
கன்னி : களிப்பு, மகிழ்ச்சி
துலாம் : நன்மை, அதிர்ஷ்டம்
விருச்சிகம் : புகழ், சாதனை
தனுசு : இலாபம், லக்ஷ்மீகரம்
மகரம் : அச்சம், பகை
கும்பம் : திறமை, முன்னேற்றம்
மீனம் : யோகம், அதிர்ஷ்டம்
சைவசித்தாந்த கொள்கைகள் சகலர். இவர்கள் ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களை உடையவர்கள். இவர்கட்கு காரணசரீரம், பஞ்சக சுகசரிரர், குணசரிரர் எனப் பெறும் பரசரீரங்கள் மூன்று பிராணமய கோசம் எனப்பெறும். சூக்கும சரீரம் ஒன்றும் அன்னமய கோசம் எனப்பெறும் தூல சரிரம் ஒன்றும் கூடியதாக உள்ளன. தாம் செய்யும் வினைகளுக்கு ஏற்ப பிறப்பும் இறப்பும் அடையும் தன்மை உடையன. இறைவன் மானுட சட்டை தாங்கி குரு வடிவாய் எழுந்தருளி மந்தரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் சமய தீட்சையால் சரியை வினையையும் விசேட தீட்சையால் கிரியை வினையையும் நிர்வாண தீட்சையால் ஞானத்தையும் அருளி மும்மலங்களையும் போக்கி அருள்கிறார். (சைவசமயக் கொள்கைகள் தொடரும்)
செவ்வாய், சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
பொருந்தா எண்கள்: 2, 3, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: அடர்பச்சை, அடர்நீலம்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)