13.03.2019 விளம்பி வருடம் மாசி மாதம் 29 ஆம் நாள் புதன்கிழமை
சுக்கில பட்ச ஸப்தமி திதி பின்னிரவு 12.39 வரை. அதன் மேல் அஸ்டமி திதி. ரோகிணி நட்சத்திரம் பின்னிரவு 1.35 மணி வரை. பின்னர் மிருகசீரிஷம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை ஸப்தமி. சித்தயோகம். மேல்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் விசாகம், அனுஷம். சுபநேரங்கள் பகல் 10.30 –11.30, மாலை 3.30– 4.30, ராகுகாலம் 12.00 –1.30, எமகண்டம் 7.30 –9.00, குளிகை காலம் 10.30 –12.00, வாரசூலம் வடக்கு. (பரிகாரம் பால்) குருபகவான் அதிசாரம் மாலை 5.39 மணிக்கு விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு அதிசாரம் ஆகின்றார். சுபமுகூர்த்த நாள்.
மேடம் : பகை, விரோதம்
இடபம் : அமைதி, சாந்தம்
மிதுனம் : வரவு, இலாபம்
கடகம் : மகிழ்ச்சி, சந்தோசம்
சிம்மம் :காரியசித்தி, அனுகூலம்
கன்னி : அமைதி, தெளிவு
துலாம் : மகிழ்ச்சி, களிப்பு
விருச்சிகம் : நஷ்டம், கவலை
தனுசு : புகழ், பாராட்டு
மகரம் : பிரயாணம், அலைச்சல்
கும்பம் : அன்பு, ஆதரவு
மீனம் : சுபம், மங்களம்
சிவசக்தி விளக்கம்: தீயியுடைய சக்தி ஒன்றாக இருந்தும் உலோகம், விறகு, உப்பு, சாதம், விஷய பேதங்களினால் உருக்கும் சக்தி, கொளுத்தும் சக்தி வெடிக்கும் சக்தி, சமைக்கும் சக்தி என்று பல்வகைப்படுத்தல் போல் சக்தியோடு புணர்ந்த சிவமும் பல்வகை பெயர்களோடு விளங்குகின்றது. (நாளை ஆன்மாக்களின் இயல்புகள் தொடரும்)
ராகு, சூரியன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6
பொருந்தா எண்கள்: 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர்நீலம்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)