11.01.2019 விளம்பி வருடம் மார்கழி மாதம் 27ஆம் நாள் வெள்ளிக்கிழமை.
சுக்கில பட்ச பஞ்சமி திதி மாலை 5.26 வரை. அதன் மேல் சஷ்டி திதி. பூரட்டாதி நட்சத்திரம் நாள் முழுவதும். சிரார்த்த திதி. வளர்பிறை. பஞ்சமி சித்தயோகம். கீழ் நோக்கு நாள். சந்திராஷ்டமம் நட்சத்திரம் பூரம். சுபநேரங்கள் காலை 9.30–10.30 மாலை 4.30–5.30. ராகுகாலம் 10.30–12.00. எமகண்டம் 3.00–4.30. குளிகைகாலம் 7.30–9.00. வாரசூலம் மேற்கு (பரிகாரம்– வெல்லம்). விஷ்ணு ஆலயங்களில் கூடார வல்லி உற்சவம்.
மேடம் : அமைதி, சாந்தம்
இடபம் : உதவி, நட்பு
மிதுனம் :நிறைவு, பூர்த்தி
கடகம் : அன்பு, ஆதரவு
சிம்மம் : தொல்லை, சங்கடம்
கன்னி : புகழ், தேர்ச்சி
துலாம் : அமைதி, நிம்மதி
விருச்சிகம் : உற்சாகம், வரவேற்பு
தனுசு : சுகம், ஆரோக்கியம்
மகரம் : புகழ், செல்வாக்கு
கும்பம் : கவனம், எச்சரிக்கை
மீனம் : உயர்வு, மேன்மை
இன்று அதிகாலை விஷ்ணுவாலயம் சென்று ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவையில் “கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா” என்று தொடங்கும் பாடலைப் பாட திருமண பாக்கியம், தொழிலில் வெற்றி ஏற்படும்.” மூட நெய் பெய்து முழங்கை வழிவார கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்” திருப்பாவை தொடரும்.
(“தடுமாறி விழுவதில் தவறில்லை. எழுந்திருக்க எண்ணமில்லாமல் இருப்பதுதான் தவறு”) சந்திரன், சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று,
அதிர்ஷ்ட எண்கள்: 7–6
பொருந்தா எண்கள்: 9– 8–3
அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை கலந்த நிறங்கள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)