03.01.2019 விளம்பி வருடம் மார்கழி மாதம் 19ஆம் நாள் வியாழக்கிழமை.
கிருஷ்ண பட்ச திரயோதசி திதி. பின்னிரவு 5.04 வரை. அதன் மேல் சதுர்த்தசி திதி. அனுசம் நட்சத்திரம் பகல் 1.25 வரை. பின்னர் கேட்டை நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை திரயோதசி. சித்த யோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் பரணி, கார்த்திகை. சுபநேரங்கள் பகல் 10.30 – 11.30, ராகு காலம் 1.30 – 3.00, எமகண்டம் 6.00 – 7.30, குளிகைகாலம் 9.00 – 10.30. வாரசூலம் – தெற்கு. (பரிகாரம் –தைலம்).
மேடம் : உயர்வு, மேன்மை
இடபம் : சுகம், ஆரோக்கியம்
மிதுனம் : லாபம், லக்ஷ்மீகரம்
கடகம் : அன்பு, இரக்கம்
சிம்மம் : இன்சொல், உற்சாகம்
கன்னி : வரவு, லாபம்
துலாம் : தடை, இடையூறு
விருச்சிகம் : பகை, விரோதம்
தனுசு : ஆசை, நட்டம்
மகரம் : சுபம், மங்களம்
கும்பம் : வாழ்வு, வளம்
மீனம் : சாதனை, புகழ்
மார்கழி திருப்பள்ளியெழுச்சி, ஆண்டாள் அருளிய திருப்பாவை அதிகாலை ஓதுதல். நாளை தொண்டரடிபொடியாழ்வார் திருநட்சத்திரம். அவதரித்த ஊர் திருமண்டஸ் குடி, மாதம் மார்கழி, நட்சத்திரம் கேட்டை, அம்சம் வநமாலாம்சம். அருளிய பிரபந்தங்கள் திருமாலை, திருப்பள்ளியெழுச்சி. திருமாலை அறியாதோர் திருமாலை அறியார். “இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.
குரு, சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட இன்று, அதிர்ஷ்ட எண் : 9
பொருந்தா எண்கள் : 3–6– 8
அதிர்ஷ்ட வர்ணங்கள் : பச்சை, மஞ்சள்
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)