31.12.2018 விளம்பி வருடம் மார்கழி மாதம் 16ஆம் நாள் திங்கட்கிழமை.
கிருஷ்ண பட்ச தசமி திதி. பின்னிரவு 5.10 வரை. அதன் மேல் ஏகாதசி திதி. சித்திரை நட்சத்திரம் பகல் 12.44. பின்னர் சுவாதி நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை தசமி. சித்தாமிர்தயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டமம் உத்திரட்டாதி, ரேவதி. சுபநேரங்கள்: காலை 6.15 – 7.15, மாலை 4.45– 5.45. ராகுகாலம் 7.30 – 9.00, எமகண்டம் 10.30 – 12.00, குளிகைகாலம் 1.30 – 3.00. வாரசூலம் – கிழக்கு. (பரிகாரம் –தயிர்).
மேடம் :காரியசித்தி, அனுகூலம்
இடபம் : அமைதி, நிம்மதி
மிதுனம் : வெற்றி, யோகம்
கடகம் : அமைதி, தெளிவு
சிம்மம் : சுகம், ஆரோக்கியம்
கன்னி : நலம், வாழ்த்து
துலாம் : முயற்சி, முன்னேற்றம்
விருச்சிகம் : லாபம், லக்ஷ்மீகரம்
தனுசு : புகழ், பெருமை
மகரம் : உயர்வு, மேன்மை
கும்பம் : பக்தி, ஆசி
மீனம் : நட்பு, உதவி
‘அதிகாலை திருப்பள்ளியெழுச்சி– “ அம்பர தலத்தில் நின்று அகல்கின்றது இருள் போய் அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே. திருப்பாவை” உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய் செம்பொற் கழலடிச் செல்வா பல தேவா! உம்பியும் நீயும் உறங்கேல் ஓர் எம்பாவாய்– ஆண்டாள் திருவடிகளே சரணம்.
ராகு, செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 5– 6–3–9
பொருந்தா எண்கள்: 2– 8–4–1
அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்.
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)