மத்திய மாகாணத்தில் கைப்பணிக் கண்காட்சி
|
 |
By
Hafeez
2012-08-18 13:24:27 |
மத்திய மாகாணக் கைத்தொழில் மகளிர் விவகார தமிழ்க் கல்வி அமைச்சு நடத்தும் கைப்பணிக் கண்காட்சி கண்டி சிற்றிசென்ரர் நிலையத்தில் இடம் பெற்றுவருகிறது.
நேற்று இடம் பெற்ற வைபவத்தில் மத்தியமாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மத்திய மாகாணக் கைத்தொழில் மகளிர் விவகார தமிழ்க்கல்வி அமைச்சர் அனுசியா சிவராஜா, கண்டி மாவட்டச் செயலாளர் காமினி செனவிரத்ன உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மத்தியமாகாணக் கைத்தொழில் மற்றும் கை வினைஞர்களது ஆக்கங்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. விசேடமாக கைத்தறி நெசவுப் புடைவை , பித்தளைத் தளபாடங்கள்,விளையாட்டுப் பொருட்கள், பதனிடப்பட்ட தோற்பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், மட்பாண்டங்கள், செயற்கை மலர்கள், விரிப்புக்கள், உருவங்கள், சித்திரங்கள், தும்பு மற்றும் சிரட்டை போன்ற கழிவுப் பொருட்கள் மற்றும் மரப்பட்டைகள் போன்ற இன்னோரன்ன பொருட்களினால் செய்யப்பட்ட ஏகப்பட்ட பொருட்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.