(எம்.மனோசித்ரா)
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் அடிப்படை சம்பளம் குறித்து தீர்மானிப்பதற்காக நாளை திங்கட்கிழமை சம்பள நிர்ணயசபை கூடவுள்ளது. கொழும்பிலுள்ள தொழில் அமைச்சில் நாளை மதியம் 2 மணியளவில் தொழில் ஆணையாளர் தலைமையில் சம்பள நிர்ணயசபை கூடவுள்ளது.
இதில் தொழில் வழங்குனர்களான கம்பனிகளின் 8 உறுப்பினர்கள், தொழில் பெறுனர்களான மக்கள் சார்பில் தொழிற்சங்க உறுப்பினர்கள் 8 பேர் மற்றும் அரசாங்கத்தின் மூன்று உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இம்முறையும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் கம்பனிகள் வழமையைப் போன்று இணக்கம் தெரிவிக்காத நிலையில் சம்பள நிர்ணயசபையினூடாக அதற்கான தீர்வைப் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்டு ஒப்பந்தத்திற்கு அப்பால் சம்பள நிர்ணயசபையூடாக 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு பெற்றுக் கொடுக்கப்படுமானால் அதனை தாம் வரவேற்பதாகவும், எனினும் அந்த சம்பள அதிகரிப்பு நிபந்தனைகளற்றதாகக் காணப்பட வேண்டும் எனவும் சில தொழிற்சங்கள் தமது நிலைப்பாடுகளை தெரிவித்துள்ளன. எவ்வாறிருப்பினும் 1000 ரூபாய் கோரிக்கைக்கு சம்பள நிர்ணயசபையில் கம்பனிகள் இணக்கம் தெரிவிக்காவிட்டால், வாக்கெடுப்பின் மூலம் அதனை நிறைவேற்றிக் கொள்ளமுடியும் என சில தொழிற்சங்கங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM