விண்வெளியில், பூமிக்கு மேலே பூமியைச் சுற்றிக்கொண்டே இருக்கும் ஒரு ஆய்வு நிலையமான சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை விண்வெளியில் அதிகம் நாட்கள் கழித்தவர்கள் என்ற சாதனையை முறியடிப்பார்கள் என நாசா தெரிவித்துள்ளது.
நாசாவின் அங்கீகாரத்துடன் விண்வெளிக்கு மனிதர்களை ஏற்றிச் சென்ற முதல் தனியார் விண்கலம் ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் க்ரூ ஆகும்.
மைக்கேல் ஹோப்கின்ஸ், விக்டர் குளோவர், ஷானன் வாக்கர் மற்றும் சோச்சி நோகுச்சி ஆகிய நான்கு வீரர்களுடன் கடந்த நவம்பரில் ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த விண்கலத்தில் சென்றுள்ள விண்வெளி வீரர்கள் 6 மாதம் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
"இவர்கள் 1974 ஆம் ஆண்டு பெப்ரவரி 8 ஆம் திகதி அன்று ஸ்கைலாப் 4 பேர் கொண்ட குழுவினர் 84 நாட்கள் படைத்த சாதனையை இவை முறியடிக்கும்" என நாசா தெரிவித்துள்ளது.
ஸ்கைலாப் குழுவில், நாசா விண்வெளி வீரர்களான ஜெரால்ட் கார், எட்வர்ட் கிப்சன் மற்றும் வில்லியம் போக் ஆகியோருடன், தங்கள் அப்பல்லோ விண்கலத்தை ஸ்கைலாப் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 47 வருடங்கள் முன்பு அனுப்பியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM