மாங்குளம் பகுதியில் பஸ் விபத்து

Published By: Digital Desk 3

06 Feb, 2021 | 06:36 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் ஏ9 வீதியில் விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.

காலியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து இன்று (06.02.2021) அதிகாலை 03.30 மணியளவில் பதிவாகியுள்ளது.

விபத்துக்குள்ளான பேருந்து வீதி அருகில் உள்ள தனியார் காணி ஊடாக பயணித்துள்ளது. எனினும் அவ்விபத்தின்போது பயணித்த பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என பொலிசார்  தெரிவிக்கின்றனர். 

விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்