(இராஜதுரை ஹஷான்)
களனிவெளி ரயில் சேவையை மேம்படுத்தும் நோக்கில் புதிதாக ரயிலொன்று மேலதிகமாக களனிவெளி பாதையில் இன்று முதல் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே, வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோரின் பங்குப்பற்றுடலுடன் முதலாவது ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் கசுன் சாமர மேலும் குறிப்பிட்டதாவது,
களனி வழி பாதையில் ரயில் கள் குறைவான அளவில் சேவையில் ஈடுப்படுத்தப்படுகின்றன. இதனால் அலுவலக ரயில் சேவையினை பயன்படுத்தும் பயணிகள் பெரும் அசௌகரியங்ளுக்குள்ளாகுகிறார்கள்.
இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் களனிவெளி பாதை ரயில் சேவை அட்டவணையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு மேலதிகமாக ரயிலொன்று சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமயை காலை 7 மணிக்கு ஹோமாகம ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் காலை 8 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும், மீண்டும் மாலை 6.18 கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து ஹோமாகம நோக்கி ரயில் நாளாந்தம் புறப்படும். ஞாயிற்று கிழமை மாத்திரம் இந்த ரயில் சேவையில் ஈடுப்படமாட்டாது.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ரயிலுக்குள் சமூக இடைவெளியை பேணும் வகையில் ரயில் சேவை ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய ரயில்களிலும் அலுவலக ரயில் சேவையினை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM