தலவாக்கலை நகரிலுள்ள அனைத்து கடைகளையும் இன்று (05.02.2021) மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை வர்த்தகர்கள் சங்கத் தலைவர் கமல் சமரவீர தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளத்தை ரூபா 1000 ஆக உயர்த்துவதற்காக தோட்ட கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இன்று வெள்ளிக்கிழமை நாடு தழுவிய ரீதியில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு நாட்டு மக்கள் அனைவரிடமும் அழைப்பு விடுத்திருக்கின்றது.
அந்தவகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், இ.தொ.கா தோட்டத் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் தலவாக்கலை லிந்துலை நகர சபைத் தலைவர் லெட்சுமன் பாரதிதாசனின் எழுத்துப்பூர்வ வேண்டுகோளின்படி மருந்தகம் தவிர நகரிலுள்ள அனைத்து கடைகளையும் மூடி பெருந்தோட்ட தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM