யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம், பழம் வீதியில் வீடுடைத்து 41 பவுண் தங்க நகைகளை திருடிய திருடன் 3 மணித்தியாலத்தில் நகரிலுள்ள நகைக்கடைகள் தொகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இன்று காலை 7 மணியளவில் பாடசாலைக்கு பிள்ளையை விடச் சென்று வீட்டின் உரிமையாளர் வீடு திரும்பிய போது, வீடு உடைத்து நகைகள் திருடப்பட்டிருந்தன.
அதுதொடர்பில் வீட்டின் உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
அதுதொடர்பில் தகவலைப் பெற்ற யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான அணியினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதன்போது சந்தேக நபர் நகைகளை விற்பனை செய்ய யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக்கடைகளில் நடமாடுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்தனர். சந்தேக நபரிடமிருந்து 41 தங்கப்பவுண் நகைகளும் 2 கிராம் 50 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் கைப்பற்றினர்.
யாழ்ப்பாணம் பொம்மைவெளியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டார் என்று மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் கூறினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM