சிங்கள மொழியைப் போன்று தமிழ் மொழியும் அரச கரும மொழியாக உள்ளமையினால் தமிழ் மொழியிலும் தேசிய கீதத்தினைப் பாடுவதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும் என மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு இன்றைய தினம் புதன்கிழமை(3) ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட மாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்ததனை மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு வன்மையாக கண்டிக்கின்றது.
சிங்கள மொழியைப் போன்று தமிழ் மொழியும் அரச கரும மொழியாக இருக்கின்ற படியினால் தமிழ் மொழியிலும் தேசிய கீதத்தினைப் பாடுவதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும் என்று மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு ஆகிய நாம் வலியுறுத்துகின்றோம்.
இது தமிழ் மொழியிலும் பாடப்படும்போது இனப்பிரச்சனைக்குரிய தீர்வுக்கான ஒரு வழியாக அமையும் என்று நம்புகின்றோம்.
இல்லையேல் இது இனப்பிரச்சனை தீர்வுக்கான வழியினை அடைக்கும் செயலாகவே அமையும் என்பதனை வலியுறுத்தி நிற்கின்றோம் என மன்னார் பிரஜைகள் குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM