"நாட்டின் வளங்களை விற்பனை செய்வதற்கு ஆட்சியாளர்கள், நாட்டின் உரிமையாளர்கள் அல்ல": எல்லே குணவங்ச தேரர்

Published By: J.G.Stephan

03 Feb, 2021 | 02:17 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஆட்சியாளர் நாட்டின் நிர்வாகிகளே அன்றி உரிமையாளர்கள் அல்ல என்பதை அரசாங்கம் உணர்ந்து செயற்படவேண்டும். கிழக்கு முனையத்தை பாதுகாத்தது போல் நாட்டின் ஏனைய வளங்களை பாதுகாப்பதற்கும் அனைவரும் ஒன்றுபடவேண்டும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

23 தொழிற்சங்கங்களும் இணைந்து போராடியதாலேயே துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாத்துக்கொள்ள முடிந்தது. எம்மை பிளவுபடுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவற்றுக்கு யாரும் துணைபோகவில்லை. இந்த ஒற்றுமை தொடர்ந்து இருக்கவேண்டும். நாட்டில் இருக்கும் ஏனைய வளங்களை விற்பனை செய்ய முற்பட்டாலும் துறைமுக தொழிற்சங்கங்கள் அதற்காக ஒத்துழைப்பு வழங்கவேண்டும். நாங்கள் எமது பலத்தை காட்டியிருக்கின்றோம். அதனால் அரசாங்கம் எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அதனை தடுத்து நிறுத்துவோம்.

அத்துடன் நாட்டின் ஆட்சியாளர் என்பது  தற்காலிக நிர்வாகிகளாகும். மாறாக அவர்கள் நாட்டின் உரிமைக்காரர்கள் அல்ல. நாட்டின் வளங்களை விற்பதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. நாட்டை அபிவிருத்தி செய்வதற்கே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவிக்கின்றனர். ஆனால் நாடு அபிவிருத்தியடைந்திருப்பதை காணமுயவில்லை. நாங்கள் சிறுவயதில் இருந்தே எமது நாடு அபிவிருத்தி அடைந்துவரும் நாடு என்றே தெரிவிக்கப்பட்டது. தற்போதும் அவ்வாறே தெரிவிக்கின்றனர்.

எனவே எமது வளங்களை விற்பனை செய்து நாட்டை அபிவிருத்தி செய்ய தேவையில்லை. எமது வளங்களை அவ்வாறே பாதுகாத்து வந்தாலே அதன் மூலம் நாட்டுக்குள் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி அபிவிருத்தி செய்யலாம். எமது வளங்களை விற்பனை செய்து வெளிநாடுகளில் கையேந்த தேவையில்லை. அதனால் அரசியல்வாதிகள் நினைத்த பிரகாரம் செயற்பட இடமளிக்க முடியாது. கிழக்கு முனையம் தொடர்பில் அரசாங்கத்தின் மீது விரக்தியடைந்திருக்கின்றோம். அதனை வெற்றிகொண்டமை மகிழ்ச்சியாக இருந்தாலும் எதிர்காலத்திலும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் நாங்கள் அவதானமாக இருக்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55