இராணுவ ஆட்சி தொடர்ந்தால் மியன்மர் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதிக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றையதினம் மியன்மாரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டார். மியன்மார் இராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியமை குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கருத்து வெளியிடுகையில்,
மியன்மாரில் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது 'நாட்டின் ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். நாட்டின் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீதான நேரடித் தாக்குதல் இதுவாகும்.
மேலும் ஜனநாயக அரசாங்கத்திற்கு அமைதியான மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையின் மத்தியில் பொருளாதாரத் தடைகளை நடைமுறைப்படுத்துவதற்கான 2016 ஆம் ஆண்டு முடிவை உடனடியாக மதிப்பாய்வு செய்யப்படும்.
இராணுவ ஆட்சி தொடர்ந்தால் மியன்மாரில் மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM