கொலை செய்யப்பட்ட நிலையில் தாயும் மகனும் சடலங்களாக மீட்பு - கொலையாளி தப்பியோட்டம்

Published By: Digital Desk 4

02 Feb, 2021 | 05:09 AM
image

அம்பாறை  மாவட்டம் தமணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரலந்தா கிராமத்தில் உள்ள வீடொன்றில் கொலை செய்யப்பட்ட  நிலையில் தாயும் அவரது 13 வயது  மகனும் சடலங்களாக  மீட்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டவர்கள்  கொலை செய்யப்பட்ட நிலையில்  காணப்படுவதுடன்  வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என   சந்தேகிக்கப்படும்   கூரிய ஆயுதம் ஒன்றை வீட்டில் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலும் இச்சம்பவமானது திங்கட்கிழமை (01) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் கடந்த கால யுத்தத்தில்    ராணுவ அதிகாரியான  கணவனை இழந்த இப்பெண்   தனது  மகனுடன் வாழ்ந்து  வந்துள்ளார்.

இந்நிலையில்   மற்றொரு நபர் சம்பவம் இடம்பெற்ற  வீட்டிற்கு வந்து அந்த பெண்ணுடன் வீட்டில் வசித்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.அத்துடன் சம்பவம் நடந்த நாளில் அந்த நபர் வீட்டிற்கு வந்து மது அருந்தியதாக பொலிஸ் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவ தினம் சந்தேக நபர் இறந்த பெண்ணின் தாயை தொலைபேசி ஊடாக அழைத்து திட்டியுள்ளார். பின்னர் இறந்த பெண்  தனது தாயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை குறித்த நபர் துன்புறுத்துவதாகவும் இதனால் மகனை நாளை பாடசாலைக்கு அழைத்து செல்ல முடியாது என கூறியுள்ளார்.

இதனால் பதற்றமடைந்த இறந்த பெண்ணின் தாய் தொடர்ந்து தொலைபேசி அழைப்புகளை தனது மகளுக்கு மேற்கொண்டார். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. காலையில்  பக்கத்து வீட்டில் இருந்த பெண்  இறந்த பெண்ணின் மகனை பாடசாலைக்கு செல்லாத காரணத்தினால்   விசாரிக்கச் சென்றுள்ளார்.

இதன் போது வீட்டின்  முன்பக்க கதவு மூடப்பட்டிருந்ததால் வீட்டின் பின்னால் இருந்து வீட்டிற்குள் நுழைந்தபோது தாயும்    மகனும் வெட்டுண்ட நிலையில்  இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அயலவர்கள் தமணை பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து  பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.

மேலும் குறித்த கொலை குறித்து குற்றவியல் புலனாய்வுத் துறை மற்றும் தமணை பொலிஸ்  நிலைய குற்றவியல் புலனாய்வு பிரிவு  இணைந்து விசாரணை மேற்கொண்டுள்ளன.

அத்துடன்  கொலையாளியைத் தேட பொலிஸ் நாய்கள் வரவழைக்கப்பட்டு  பயன்படுத்தப்பட்டு வருவதுடன்  கைரேகைகள் தடயங்கள் குறித்தும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

சந்தேக நபர்  சம்பவம் இடம்பெற்ற  அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். அவர்  திஸ்ஸமஹராமாவில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

 குறித்த சம்பவத்தில் இறந்தவர் பி.ஜி. தினேஷிகா சதமாலி குலரத்னே (33)  அவரது மகன் எஸ்.ஏ.ஸ்ரீமல் சச்சீந்திர லக்ஷன் ரூபசிங்க (13) என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலுக்கமைய மேலதிக விசாரணைகளை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27