(எம்.மனோசித்ரா)
நாட்டில் மொத்த கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 64 505 ஆக அதிகரித்துள்ளது. இன்று திங்கட்கிழமை மாலை 7 மணி வரை 348 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
நாட்டில் இது வரையில் இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 60 174 தொற்றாளர்கள் இரண்டாம் அலையுடன் தொடர்புடையவர்களாவர்.
58 075 தொற்றாளர்கள் இது வரையில் குணமடைந்துள்ளதோடு , 6114 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மரணங்களின் எண்ணிக்கை 316 ஆக உயர்வடைந்துள்ளது.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்தை அண்மித்தது : தடுப்பூசி ஏற்றப்பட்ட 59 ஆயிரம் பேரில் எவருக்கும் பக்கவிளைவு இல்லை.
நாடளாவிய ரீதியில் 79 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 11 399 சிகிச்சை படுக்கைகள் உள்ளன. அவற்றில் 8267 படுக்கைகள் பாவனையிலுள்ளன.
இதேவேளை நாடளாவிய ரீதியில் 146 அவசர சிகிச்சை பிரிவிற்கான படுக்கைகள் தயார்படுத்தப்பட்டுள்ளதோடு அவற்றில் 24 படுக்கைகளில் மாத்திரமே தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 13 392 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்தோடு நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை 59 154 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. ஞாயிறன்று மாத்திரம் 21 329 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
தடுப்பூசியை ஏற்றிக் கொண்ட எவருக்கும் இதுவரையில் பாரதூரமான பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்று பதில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
ஞாயிறன்று பதிவான மரணங்கள்
நேற்று ஞாயிற்றுக்கிழமை மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதற்கமைய நாட்டில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 316 ஆக உயர்வடைந்துள்ளது.
கொழும்பு 8 ஐ சேர்ந்த 38 வயதுடைய ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து வெலிசறை மார்பு சிகிச்சை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது அந்த வைத்தியசாலையில் ஜனவரி 31 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்றுடன் நுரையீரல் தொற்று ஏற்பட்டமை இவரது மரணத்திற்கான காரணமாகும்.
கடுவெல பிதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய பெண்ணொருவர் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜனவரி 27 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் இதயம் செயழிலந்தமை இவரது மரணத்திற்கான காரணமாகும்.
அங்குறுவாதொட்ட பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய பெண்ணொருவர் ஹொரண ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அங்கு ஜனவரி 30 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்று , உயர் இரத்த அழுத்தம் இவரது மரணத்திற்கான காரணமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM