இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு  7 அம்சங்களை உள்ளடக்கிய புதிய திட்டம்

Published By: Sajishnavan

01 Feb, 2021 | 05:08 PM
image

இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான ஏழு அம்சங்களை உள்ளடக்கிய திட்டமொன்றை விளையாட்டுத்துறை அமைச்சு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகள், தேசிய விளையாட்டுப் பேரவையின் உறுப்பினர்களுக்கு இடையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில், இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய செயல்திறன், வீரர்களின் முகாமைத்துவம் மற்றும் கிரிக்கெட் அணிக்கான வீரர்களை முறையாக தேர்ந்தெடுப்பதில் வீரர்களின் செயல்திறன் பகுப்பாய்வு மற்றும் அதன் தற்போதைய வழிமுறைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டன.

அவ்வகையில் விளையாட்டுத்துறை அமைச்சினால் கிரிக்கெட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக வெளியிடப்பட்டுள்ள 7 புதிய திட்டங்களாக  

1.தற்போதுள்ள தேர்வுக் குழுவைக் கருத்தில் கொண்டு புதிய தேர்வுக் குழுவை நியமித்தல்.

2.தற்போதைய முதல்தர கிரிக்கெட் போட்டி மற்றும் அதன் கட்டமைப்பைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்சம் 8 அணிகள் மற்றும் அதிகபட்சம் 14 அணிகள் டியர்-1 பிரிவில் உள்ளடக்குதல், டியர்-1 ஐ முதல் பிரிவின் கீழும், டியர்-2 ஐ முதல் பிரிவில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுத்தல்.

 
3.புதிய வடிவில் மாகாணங்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்தல். அதற்காக ஐந்து அணிகளைச் சேர்ப்பது மற்றும் ப்ரீமியர் டியர் 1/2 விளையாட்டுக் கழகம் மற்றும் பிற விளையாட்டுக் கழகங்களைக் குறிக்கும் அணிகளை உருவாக்குதல்.

4.தேசிய கிரிக்கெட் அணியில் நியமிக்கப்பட வேண்டிய உயர் தகுதி வாய்ந்த மற்றும் தகுதியான அதிகாரிகளை அடையாளம் காணுதல். (அணியின் ஆலோசகர், பயிற்றுவிப்பாளரின் நியமனம், கிரிக்கெட் இயக்குநர், முழுநேர முகாமையாளர்)

5.விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் ஒப்பந்தங்களை வடிவமைப்பதில் அவர்களை ஊக்கப்படுத்தும் நடைமுறையை அவதானம் செலுத்தல். இங்கே அவர்களின் தனிப்பட்ட திறமைகள் மற்றும் தொடர்ச்சியான ஒழுக்கம் குறித்து அதிக கவனம் செலுத்தப்படும்.

6.இலங்கை கிரிக்கெட்டின் முகாமையாளர் ஊடாக வீரர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களின் உடல் தகுதி மற்றும் ஒழுக்கம் குறித்து அதிக கவனம் செலுத்தப்படும்.

7.தேசிய மற்றும் சர்வதேச கிரிக்கெட் கட்டமைப்பை தயாரிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்ட தகுதிவாய்ந்த கிரிக்கெட் குழுவொன்றை பரிந்துரைத்தல் ஆகியன முடிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகளுக்கும், தேசிய அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தருக்கும் இடையே பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக விளையாட்டுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21