கிண்ணியா புளியடிக்குடா, பக்கிரான்வெட்டை, வன்னியனார் மடு போன்ற விவசாயப் பகுதிகளில் இரவு பெய்த கடும் மழை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியிருக்கிறது.
நீர் இல்லாத போது இந்த ஆறுகளை குறுக்காக கட்டுவதும் மழை, வெள்ளம் வருகின்ற போது அவற்றைக் கழற்றுவதும் அடிக்கடி நடைபெறுகின்ற விடயமாகும்.
இந்த நிலைமை விவசாயிகளுக்கு உயிர் அச்சுறுத்தலையும் கூட சில நேரம் ஏற்படுத்துகின்றது.
இந்த நவீன காலத்தில் 10 அடி உயரத்திற்கு மேற்பட்ட நீரில் இவ்வாறு விவசாயிகள் கஷ்டப்படுவது இப்பிரதேசத்தில் மாத்திரமே நடைபெறுகின்றது.
நீர்ப்பாசனத் திணைக்களம், அரசியல் தலைமைகள் மற்றும் அதிகாரிகள் எல்லோரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டும் பொறிமுறை இதுவரை செய்து தரப்படாமை மிகவும் வேதனை அளிப்பதாக விவசாயிகள் கவலை வெளியிடுகின்றார்கள்.
எனவே இனிமேலும் இவ்வாறான துர்ப்பாக்கிய நிலைமை இந்த விவசாயிகளுக்கு ஏற்படக்கூடாது எனக்கருதி இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக குறிப்பிடப்பட்ட மூன்று இடங்களிலும் பொறி முறையை அமைத்துத் தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுகின்றார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM