கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு சன்மானம்: அஜித்ரோஹண

Published By: J.G.Stephan

30 Jan, 2021 | 10:41 AM
image

(செ.தேன்மொழி)
மீடியாகொட பகுதியில் இளைஞனனொருவனின் கொலை தொடர்பில் தேடப்பட்டு வரும் பிரதேச சபை உறுப்பினர் தொடர்பில் தகவல்களை வழங்கும் நபர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

 அதேவேளை சந்தேகநபருக்கு அடைக்களம் கொடுப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், மீடியாகொட பகுதியில் கடந்த 25 ஆம் திகதி மாலை 24 வயதுடைய  யூ.எச். தரிந்து குணசேகர எனப்படும் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்த இளைஞனின் கையை வெட்டி பிரிதொரு இடத்தில் விட்டுச் சென்றுள்ளனர். எனினும் பின்னர் சந்தேக நபர்கள் நால்வரும் தாமாகவே மிடியாகொட பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து சந்தேக நபர்களை கைது செய்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். அதற்கமைய இன்னொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, இந்த கொலையை மீடியாகொட பகுதியைச் சேர்ந்த பட்டபொல பிரதேச சபையின் உறுப்பினரான சக்தி மதுஷங்க என்ற நபரே திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ளதுடன், அவர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றால், 071-8591481 என்ற இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு அல்லது மீடியாகொட பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிக்கு அல்லது 1997 என்ற அவசர தகவல் பிரிவுக்காவது தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்.

குறித்த சந்தேக நபர் தொடர்பில் தகவல்களை வழங்கும் நபர்களுக்கு பெறுமதிமிக்க சன்மானம் வழங்கப்படுமெனவும், சந்தேக நபர் தலைமறைவாக இருப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ள நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும்  பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37