பாகிஸ்தான் வானில் திடீரென தோன்றிய பறக்கும் தட்டு - விமானி அதிர்ச்சி

29 Jan, 2021 | 04:50 PM
image

விமான பயணத்தில் வானில் திடீரென தோன்றிய பறக்கும் தட்டு ஒன்றை விமானி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் இருந்து லாகூர் நோக்கி விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது.

இதனை பாகிஸ்தான் சர்வதேச எயார் லைன்ஸ் நிறுவனத்தின் விமானி கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் அதனை வீடியோவாக எடுத்துள்ளார்.  இதுபற்றி விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி விமானி கூறும்பொழுது,

சூரியஒளி இருக்கும் பொழுது அதனை விட மிக பிரகாசமுடன் அந்த பறக்கும் தட்டு காணப்பட்டது.  பகல் பொழுதில், விமான பயணத்தில் இதுபோன்ற அதிக பிரகாசம் கொண்ட பொருள் ஒன்றை காண்பது மிக அரிது.

வானில் தென்பட்ட அந்த பொருள் கிரகம் இல்லை.  ஆனால், பூமிக்கு அருகே காணப்படும் விண்வெளி நிலையம் அல்லது ஒரு செயற்கை கிரகமாகக் கூட அது இருக்கலாம் என கூறியுள்ளார்.

இதேவேளை, பாகிஸ்தானின் ரகீம் யார் கான் பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் கூட குறித்த பறக்கும் தட்டை அவதானித்துள்ளனர். அவர்களும் அதனை வீடியோ எடுத்துள்ளனர்.

இதுபற்றி பாகிஸ்தான் சர்வதேச எயார்லைன்ஸ் நிறுவன செய்தி தொடர்பு அதிகாரி ஒருவர் தெரிவிக்கும் போது, அது பறக்கும் தட்டா அல்லது வேறு ஏதும் பொருளா என உறுதியாகக் கூற முடியாது.

அந்த பொருள் என்ன என்பது பற்றி உடனடியாக எதுவும் கூறிவிட முடியாது.  உண்மையில், அந்த பொருள் என்ன என்று எங்களுக்கு தெரியவில்லை.  

எனினும் வானில் ஏதோவொன்று தென்பட்டுள்ளது.  அதுபற்றி விதிமுறைகளின்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right