பாராளுமன்றப் பணியாளர்களை எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை 

Published By: Digital Desk 3

28 Jan, 2021 | 07:16 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்ற வளாகத்தில் வாரத்துக்கு ஒருதடவை பாராளுமன்றப் பணியாளர்களை எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.  இந்தப் பரிசோதனைகளில் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்திருக்கின்றோம் என பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட உள்ள பி.சி.ஆர் பரிசோதனை தொடர்பாக விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத் திணைக்களத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் காலப் பகுதியிலும், அமர்வுகள் இடம்பெறாத காலப் பகுதியிலும் வாரத்துக்கு ஒரு தடவை பாராளுமன்றப் பணியாளர்களை எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.  இந்தப் பரிசோதனைகளில் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்திருக்கின்றோம்.

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  வசந்த யாப்பா பண்டார தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக அறியக்கிடைத்த பின்னர் அவருடன் சிறிது நேரம் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி உபுல் கலப்பதி தானாக முன்வந்து பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கு உட்பட்டதுடன், இவற்றில் தொற்று ஏற்படவில்லையென்பதை உறுதிப்படுத்தும் வைத்திய அறிக்கை படைக்கல சேவிதரிடம் ஏற்கனவே கையளிக்கப்பட்டுள்ளது.

2021 ஜனவரி மாதம் 13 ஆம் திகதி முதல் இதுவரை பாராளுமன்ற வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் இறுதியாக 2021-01-25 ஆம் திகதி 190 பேர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் இதில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47