இலங்கையில் முதலாவது IET மாணவர் தனிப்பிரிவு SLIIT இல் நிறுவப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்ற தகவல் தொழில்நுட்ப கற்கைகளை வழங்க இந்த IET மாணவர் தனிப்பிரிவு SLIIT ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.
இந்த IET மாணவர் தனிப்பிரிவு நிறுவும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
மாலபே SLIIT கம்பஸ் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வை SLIIT இன் கணினி பீடத்தின் தகவல் கட்டமைப்பு பொறியியல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
IET UK என்பது பொறியியல் மற்றும் தொழில்நுட்ப சமூகத்தில் உலகின் முன்னணி நிபுணத்துவ சங்கங்களில் ஒன்றாக அமைந்துள்ளதுடன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பாடங்கள் ஆகியன தொடர்பில் பரந்தளவு விடயங்களை உள்வாங்கியுள்ளது.
SLIIT இன் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பேராசிரியர் லலித் கமகே கருத்துத் தெரிவிக்கையில்,
“IET இல் உலகளாவிய ரீதியில் பல சிறந்த மற்றும் செயல்நிலையிலுள்ள மாணவர் கட்டமைப்புகள் காணப்படுகின்றன. மாணவர் தனிப்பிரிவு ஒன்றை நிறுவியுள்ளதன் மூலமாக SLIIT மாணவர்களுக்கு உலகின் முன்னணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களின் அறிவு பகிர்வு வலையமைப்புடன் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்” என்றார்.
IET மாணவர் தனிப்பிரிவில் அங்கம் வகிப்பதன் மூலம்ரூபவ் அங்கத்தவர்களுக்கு தமது தொழில் நிலையில் அனுகூலத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். நிபுணத்துவ அபிவிருத்தியை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் IET சேவைகளில்IET வலையமைப்புடன் ஈடுபாட்டை மேம்படுத்தக்கூடிய வாய்ப்புகள் மற்றும் IET மாணவர் தனிப்பிரிவுகளை உருவாக்கும் வாய்ப்புகளை வழங்கும் வகையில் அமைந்துள்ளன.
SLIIT இன் IET செயற்பாடுகளுக்கான ஆலோசகரும் ஒழுங்கிணைப்பாளருமான அனுராத ஜயகொடி கருத்து தெரிவிக்கையில்,
“வெற்றி என்பதற்கு பாரமுயர்த்தி கிடையாது. படிப்படியாக முன்னேறிச் செல்ல வேண்டும். எனவேரூபவ் IET மாணவர் தனிப்பிரிவில் இணைந்து கொள்வது என்பது தமக்கு சிறந்த தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ள பொருத்தமான படிமுறையாக அமைந்துள்ளது.
மாணவர்களுக்கு IET போன்ற குழு என்பது மிகவும் சிறப்பானதாக அமைந்துள்ளதுடன் சர்வதேச புகழ்பெற்றதாகவும் திகழ்கிறது.
IET ஸ்ரீ லங்கா வலையமைப்பின் தலைவர் தம்மிக நானயக்கார கருத்து தெரிவிக்கையில்,
“தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் ஆகியவற்றை ஒன்றிணைத்து பொது கட்டமைப்பு ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைவருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்திரூபவ் தடைகளை தகர்த்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும்” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM