தெற்கு தாய்லாந்தில் உள்ள ஒரு பிரபலமான மதுபானசாலையில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போது, கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறியதற்காக 89 வெளிநாட்டவர்களை கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை இரவு தாய்லாந்தின் கோ ஃபாங்கன் அமைந்துள்ள மதுபானசாலைகள் மீது நடத்தப்பட்ட விசேட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட அரசின் அவசரகால சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அமெரிக்க, பிரிட்டன், சுவிட்சர்லாந்து மற்றும் டென்மார்க் உட்பட 10 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்குகின்றனர்.
கைதின் பின்னர் பொலிஸாரால் வெளியிடப்பட்ட சோதனையின் புகைப்படங்களில், கைதானவர்கள் சாதாரணமான உடையணிந்தும் நெரிசலுக்கு மத்தியிலும் முகக் கவசம் அணிந்திருந்ததை வெளிக்காட்டியுள்ளது.
தாய்லாந்தின் சூரத் தானி மாகாணத்தில் உள்ள கோ ஃபங்கன் தீவு சுற்றுலாப் பயணிகளுக்கு பயணிகளுக்கு ஒரு பிரபலமான இடமாகும். இருப்பினும், கடந்த ஏப்ரல் முதல் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்குள் நுழைவதற்கு தாய்லாந்து தடை விதித்துள்ளது.
தாய்லாந்தில் தற்சமயம் 15,465 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதனால் 76 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM