எதிர்வரும் ஜனவரி 30 முதல் பெப்ரவரி 4 ஆம் திகதி வரை சுதந்திர சதுக்கத்தை சுற்றிய பகுதிகளில் வாகன போக்குவரத்து தடை செய்யப்படும் என்று பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
சுதந்திர தினத்திற்கான ஒத்திகை மேற்கண்ட காலப் பகுதியில் நடைபெறவுள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிருபமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.
இதன் விளைவாக, சுதந்திர சதுக்கத்தை அண்மித்த வீதிகள் மற்றும் இணைக்கும் வீதிகளினூடான போக்குவரத்து நடவடிக்கை தடைசெய்யப்படும்.
ஒத்திகை நாட்களில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும் சுதந்திர தினத்தன்று அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும் இவ்வாறு போக்குவரத்து தடைசெய்யப்படும்.
இதேவேளை இந்த நாட்களில் தாமரைத் தடாகத்திற்கு அருகே வீதியின் ஒரு பகுதியும் போக்குவரத்துக்காக மூடப்படவுள்ளது.
இந்த காலகட்டத்தில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளதாவும் அஜித் ரோஹானா தெரிவித்தார்.
இதேவேளை இன்று நாடு முழுவதும் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுலாவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய ஆட்களை வாகனங்களில் ஏற்றிச் செல்வது குறித்து விசேட கவனம் செலுத்தப்படும்.
வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர், அதிக வேகமாக வாகனங்களைச் செலுத்துவோர், குடிபோதையில் வாகனங்களைச் செலுத்துவோர் போன்றவர்கள் கைது செய்யப்படுவார்கள். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கொவிட் சுகாதார விதிமுறைகளை மீறும் வகையில் ஆசனங்களின் எண்ணிக்கையைவிட கூடுதலான பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் வண்டி உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM