(ஆர்.யசி)
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு கொடுப்பதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திவரும் துறைமுக தொழிற்சங்கங்கள், கிழக்கு முனையத்தை முழுமையாக துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டுவரும் போராட்டத்தை நாளை வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்திற்குள் இருந்தே தொடக்க தீர்மானித்துள்ளனர். அரசாங்கத்துடன் இனி பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில்லை என்பதையும் தெளிவாக அறிவித்துள்ளனர்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளின் முதலீட்டுடன் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியாக துறைமுக தொழிற்சங்கங்கள் போராடி வருகிறனர்.
இந்நிலையில் துறைமுக விவகாரத்தை கையாள ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உபகுழுவின் இறுதித் தீர்மானத்தை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளதுடன், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை முழுமையாக நிராகரிப்பதாகவும், இனிமேல் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துவிட்டனர்.
இதனை அடுத்து நேற்று முன்தினமும், நேற்றும் துறைமுக தொழிற்சங்கங்கள் தமக்குள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்த நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும், துறைமுக அதிகார சபையின் ஒருசில அதிகாரிகள், துறைமுகத்தின் வணிக செயற்பாடுகளில் ஈடுபடும் தேசிய நிறுவனங்கள் ஆகியவற்றை கண்டித்து போராட்டத்தில் குறித்த தீர்மானித்துள்ளனர்.
அதற்கமைய நாளை வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு 23 தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து துறைமுகத்திற்குள் பாரிய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளனர்.
இன்றைய தினம் காலையில் அஸ்கிரிய, மல்வத்து மாநாயக தேரர்களை சந்தித்தும் தமது கோரிக்கைகளை முன்வைத்து அனுமதியினை பெற்றுக்கொள்ளவுள்ளனர். இனியும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் பயனில்லை எனவும், 49 வீத உரிமம் இந்தியாவிற்கு செல்வது ஒட்டுமொத்த துறைமுகத்தையும் இந்தியாவிற்கு தரைவாக்கும் செயற்பாடு என்பதால் அரசாங்கத்தை வன்மையாக கண்டித்தே தமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM