இலங்கை கடற்படையினர் கற்பிட்டி கடற்கரையில் நேற்று மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின்போது சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 1340 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள், 80 கிலோ கிராம் கிளைபோசேட் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் இந்த சம்பவத்தின்போது மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், கடத்தல் நடவடிக்கைக்காக அவர்கள் பயன்படுத்திய படகு மற்றும் லொறி என்பவற்றையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
1340 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளை 37 பைகளிலிருந்தும், 80 கிலோ கிராம் கிளைபோசேட்டை 800 பக்கெட்டுகளிலிருந்தும் கடற்படையினர் மீட்டுள்ளனர்.
சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் 35 முதல் 43 வயதுக்குட்பட்ட கற்பிட்டி பகுதியில் வசிப்பவர்கள் ஆவர்.
சந்தேக நபர்கள் உலர்ந்த மஞ்சள் மற்றும் கிளைபோசேட் படகு மற்றும் லொறி ஆகியவவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM