(செ.தேன்மொழி)
கந்தக்காடு கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைப் பெற்றுவரும் கைதியொருவருக்கு வழங்கும் நோக்கத்தில் சட்டவிரோதமாக பொதியொன்றை பெற்று வைத்திருந்த சிறைச்சாலை அதிகாரியின் பணி இடை நிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இதுத் தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது ,
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை முகாமில் சிகிச்சைப் பெற்றுவரும் கைதியொருவருக்கு வழங்குமாறு கொடுக்கப்பட்ட உணவுப் பொதியொன்றை , அங்கு சேவையில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரியொருவர் பெற்றுக் கொண்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இதன்போது , சம்பந்தப்பட்ட சிறைச்சாலை அதிகாரியின் அறை சோதனைச் செய்யப்பட்டுள்ளதுடன் , அங்கிருந்து பொதியொன்றும் கைப்பற்றப்பட்டது. அந்த பொதியில் உணவு , 10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் புகைத்தலுக்காக பயன்படுத்தப்படும் லைட்டர்கள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளன.
இதுத் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் , இந்த விவகாரம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரியின் பணி இடை நிறுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM