( அனுஷா)
உலக அளவில் 20 மில்லியன் மக்களில் ஒருவருக்கு ஏற்படும் அரிதான 'ஏற்ரியல் மைக்ஸோமா' என்ற இதய பாதிப்பிற்கு நவீன சத்திரசிகிச்சை கண்டறியப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இரத்தசோகை, கரோனரி தமனி பாதிப்பு, உயர் குருதி அழுத்தம், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயின் காரணமாக எம்மில் சிலருக்கு 'ஏற்ரியல் மைக்ஸோமா' எனப்படும் இதயப்பகுதியில் கட்டி ஏற்படும்.
இதன் காரணமாக கடுமையான பக்கவாதம், மூட்டு உணர்வின்மை, தலைவலி, மூச்சுத்திணறல் போன்ற ஏராளமான பாதிப்புகள் ஏற்படும்.
இதற்கு உரிய தருணத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் மாரடைப்பு, பெருமூளை சிதைவு, பக்கவாதம் மற்றும் உயிருக்கும் ஆபத்து நேரக் கூடிய விளைவுகளும் ஏற்படக்கூடும். ஏற்ரியல் மைக்ஸோமா எனப்படும் இத்தகைய பாதிப்பிற்கு இதுவரை மருந்துகள் மூலமாக தான் நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இதற்கு Median Sternotomy & Minithoracotomy என்ற கணினி உதவியுடன் கூடிய நவீன சத்திர சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது.
இத்தகைய சத்திர சிகிச்சையை பயன்படுத்தி அண்மையில் சென்னையில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் 64 வயதான பெண்மணி ஒருவருக்கு ஏற்பட்டிருந்த இதய கட்டியை மருத்துவ நிபுணர்கள் வெற்றிகரமாக அகற்றினார்கள்.
இத்தகைய இதய கட்டிகளை சத்திர சிகிச்சைகளின் மூலம் அகற்றுவது தான் பாதுகாப்பான மருத்துவ நடைமுறை என இதய சத்திர சிகிச்சை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
டொக்டர் தில்லை வள்ளல்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM