புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டவில்லு பிரதேசத்தில் கைவிடப்படட்ட கிணறு ஒன்றிலிருந்து மனித எழும்புக் கூட்டின் பாகங்களைக் கண்டெடுத்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவல் ஒன்றினையடுத்து அவ்விடத்திற்குச் சென்ற பொலிஸார் இந்த மனித எழும்புக் கூட்டின் பாகங்களை மீட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட இந்த மனித எழும்புக் கூடு சில வருடங்கள் பழைமையானதாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மனித எழும்புக் கூடு காணப்பட்ட கிணற்றுக்கு அருகாமையில் இருந்து சவப்பெட்டியினுள் சுற்றப்பட்டிருக்கும் துணித் துண்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் பிரகாரம் எவராவது அடக்கம் செய்யப்பட்ட பிரேதம் ஒன்றை தோண்டி எடுத்து அதன் எழும்புக் கூட்டினை இங்கு கொண்டுவந்து கிணற்றினுள் போட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
புத்தளம் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM