இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்று வெற்றி கொண்டுள்ளது.
இன்று (25.01.2021) காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற தொடரின் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்துடன் இலங்கை அணியை 6 விக்கெட்களினால் தோற்கடித்ததன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.
இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து அணிக்கு 164 ஓட்டங்களை வெற்றியிலக்காக இலங்கை அணி நிர்ணயித்திருந்தது.
இதன்படி, ஆடிய இங்கிலாந்து அணி 43.3 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 164 ஓட்டங்களை பெற்று வெற்றியை தம்மவசப்படுத்திக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் டொம் சிப்லி ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களையும் ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் லசித் எம்புல்தெனிய 73 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இலங்கை மண்ணில் வைத்து இலங்கை அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 6 ஆவது முறையாக இங்கிலாந்து அணி பெற்றுக்கொண்ட வெற்றி இதுவாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM